வியாழக்கிழமை, 4 செப் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • செம்மணி
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் சிறி லங்கா-விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Last updated: ஜூலை 13, 2025 04:59
Share
SHARE

அமெரிக்க வரி விதிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், ஆசியாவில் இலங்கை மாத்திரமே அமெரிக்காவுடன் தீர்வை வரி தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்திருந்தார்.

அது மாத்திரமின்றி இரு நாடுகளும் இணைந்து கூட்டு அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முன்னெடுக்கப்படுவதாகவும் தொடர்ந்தும் தெரிவித்து வந்தனர்.

15 சதவீத வரி குறைப்பை பெற்றுக் கொண்டு ஆடை தொழிற்துறையை பாதுகாக்க முடியும் என்றும் உறுதியளித்தனர். ஆனால் இவை அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவினால் சிறி லங்காக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

புதிய கூட்டணியால் தமிழரசுக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை-எம்.ஏ.சுமந்திரன்
வேட்பு மனு நிராகரிப்பு; தவிடுபொடியான வியாழேந்திரனின் கனவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னதாக அறிந்த அநுர அரசின் முக்கிய அமைச்சர்
சிறி லங்காவில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம் ஆதரவு!

இவ்வாறு சிறி லங்காக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள போதிலும், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு 20 சதவீதம் மாத்திரமே வரி விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமை சிறி லங்காவின் ஆடை உள்ளிட்ட ஏற்றுமதிகளுக்கான கேள்வி வீழ்ச்சியடையச் செய்யும். இது மாத்திரமின்றி மலேசியா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

44 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ள போதிலும், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் எம்மை விட குறைவான வரி வீதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமையால் அது அமெரிக்க ஏற்றுமதி சந்தையில் எமக்கு பாரிய சவாலாக அமையும்.

ஏனைய நாடுகள் தொடர்பில் எந்தவொரு தகவலையும் தெரிந்து கொள்ளாமல், சிறி லங்கா மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து அனைவரும் கவலையடைந்துள்ளனர். இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

இவற்றுக்கு மத்தியில் இந்தியாவின் நிலவரம் என்ன என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தியாவுக்கு எந்தளவு வரி அறிவிக்கப்படவுள்ளது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரியும் எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். எவ்வாறிருப்பினும் இந்த விவகாரத்தில் அரசாங்கம் பொய் கூறியமையால் முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்றம் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article தேசிய இனங்களின் உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் கை எழுத்துப் போராட்டம்!
Next Article இனவழிப்புக்கு ஆதரவாக இருந்த ஜேவிபியிடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இனவழிப்புக்கு ஆதரவாக இருந்த ஜேவிபியிடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அரசியற் செய்திகள்
தேசிய இனங்களின் உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் கை எழுத்துப் போராட்டம்!
அரசியற் செய்திகள்
வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமானவை விடுவிப்பு
அரசியற் செய்திகள்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்
அரசியற் செய்திகள்
செம்மணி விவகாரம் – ஆழ்ந்த கவலையில் பிரித்தானியா
அரசியற் செய்திகள்
காணி அபகரிப்புகள் இந்த அரசு மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் – செல்வம் அடைக்கலநாதன்
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.