திங்கட்கிழமை, 7 ஜூலை 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • செம்மணி
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து ஆழ்ந்த கவனம் கொள்ளும் பிரித்தானியா !

Last updated: ஜூலை 5, 2025 08:00
Share
SHARE

யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சிகள் குறித்து இங்கிலாந்து அரசாங்கம் “ஆழ்ந்த கவலை” தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் விடயத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான அட்டூழிய தளங்களில் ஒன்றாக இது கருதப்படுவதால், இது குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

பன்னாட்டு அபிவிருத்தி குழுவின் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் சாரா சாம்பியனினால் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ள பபிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் துணை செயலாளர் கெத்தரின் வெஸ்ட், பொறுப்புக்கூறலுக்கு இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், “நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து விவாதிக்கவும், குறிப்பாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகளில் உறுதியான முன்னேற்றத்தை வலியுறுத்தவும் சிறிலங்கா அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

செம்மணி தளத்தில் “சுயாதீன ஐ.நா. விசாரணைக்கு” ஆதரவாக, அகழ்வாராய்ச்சிகள், தடயவியல் பகுப்பாய்வு மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட கலந்தாய்வுகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்திப் பணிமனை (குஊனுழு) என்ன பிரதிநிதித்துவங்களைச் செய்தது என்று சாம்பியன் கேட்டிருந்தார்.

“செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி குறித்து இங்கிலாந்து அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது,” என்று வெஸ்ட் பதிலளித்தார். “மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஆதரிப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”

இந்த ஆண்டு ஆரம்பத்தில் தான் மேற்கொண்ட இலங்கைக்கான பயனத்தைக் குறிப்பிட்டு, வெஸ்ட் மேலும் கூறுகையில், “சனவரியில், நான் இலங்கைக்கு விஜயம் செய்து, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிவில் சமூக அமைப்புகள், அத்துடன் வடக்கு – கிழக்கு இலங்கையின் அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பினரை சந்தித்து மனித உரிமைகள் குறித்து கலந்துரையாடினேன்” என்றார்.

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் “நாடு முழுவதிலும் உள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றனர், அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் செயல்படுகின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார், மேலும் இந்த பிரச்சினை சிறிலங்கா அரசாங்கத்திடம் நேரடியாக எழுப்பப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்தினார்.

You Might Also Like

இன்று 18 மணித்தியால நீர் விநியோகத் தடை!
வேலைவாய்ப்பு வழங்குவதாக அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி மோசடி!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் கண்டனம் வெளியிட்டுள்ள யாழ்.சர்வமதப் பேரவை
மதியம் 2 மணி வரையிலான வாக்களிப்பு வீதம்

இங்கிலாந்தின் பன்னாட்டுப் பங்கை அமைச்சர் தொடர்ந்து உறுதிப்படுத்தினார், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய குழுவுடன் இணைந்து குற்றவாளிகள் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையில் பன்னாட்டு முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்” என்று கூறினார்.

செம்மணி மனிதப் புதைகுழி நீண்ட காலமாக 1990களில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத படுகொலைகளுடன் தொடர்புடையது. 1998 ஆம் ஆண்டு தமிழ் பள்ளி மாணவி கிருசாந்தி குமாரசாமியின் கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சோமரத்ன ராஜபக்சவால் முதலில் இது வெளிப்படுத்தப்பட்ட பின்னர், இந்த தளம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 1999 இல் மேற்கொள்ளப்பட்ட பகுதி அகழ்வாராய்ச்சியில் 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் எந்த ஒரு உயர்மட்ட அதிகாரியும் இதுவரை வழக்கு தொடரப்படவில்லை.

இந்த தளம் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் மீண்டும் வெளிப்பட்டுள்ளது, மேலும் பெருந்தொகையான எலும்புக்கூடுகள், அவற்றில் பல குழந்தைகள் என நம்பப்படுகிறது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித உரிமை குழுக்கள் மற்றும் காணாமலாக்கப்பட்ட தமிழ் குடும்பங்கள் தொடர்ச்சியாக பன்னாட்டு மேற்பார்வைக்கு அழைப்பு விடுத்துள்ளன, சான்றுகள் சிதைக்கப்படுவதையும், இலங்கை அரசின் நீண்டகால தண்டனையின்மை வரலாற்றையும் எச்சரித்துள்ளன.

இந்த வார தொடக்கத்தில், தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவரான டேம் சிவோபன் மெக்டொனா, ஏற்கனவே உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 46ஃ1 இன் கீழ் பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ள இங்கிலாந்தை வலியுறுத்தினார், தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதில் கடந்தகால தோல்விகளை மீண்டும் நிகழ்த்துவதைத் தவிர்ப்பதற்கு செயல்படத் தவறினால் ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Chemmani Mass GraveFeatured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article மனிதப் புதைகுழிக்கான ஐ.நா ஆணையாளரின் பயனம் தேவையற்றது – நாமல்
Next Article செம்மணி மனிதப் புதைகுழிக்கு பன்னாட்டு நீதி கோரி பிரித்தானியத் தமிழர்கள் போராட்டம் !
விரைவில் சிறி லங்காக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள்!
செய்திகள்
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும் – நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு!
செய்திகள்
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்-அமைச்சர் விஜித ஹேரத்
அரசியற் செய்திகள்
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் கனடாவில் போராட்டம்
செய்திகள்
தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அணி திரள்விற்கு அழைப்பு !
செய்திகள்
இன்றும் தொடரும் அகழ்வு பணிகள்
செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.