திங்கட்கிழமை, 7 ஜூலை 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • செம்மணி
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாழ்.பல்கலையில்

Last updated: ஜூலை 4, 2025 11:40
Share
SHARE

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 40 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்ட 34 மனித என்புத் தொகுதிகள் யாழ். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட பாடசாலைப் புத்தகப் பை, பொம்மை, காலணி, சிறு வளையல் போன்ற பொருட்கள் நீதிமன்றக் கட்டுக்காவலில் சான்றுப் பொருட்களாகப் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணிப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துரைத்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மூன்று நாட்கள் இடம்பெற்ற வேளையில் மழை காரணமாக நிறுத்தப்பட்டு பின் ஆறு நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தன.

அதன் பின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக 8 நாட்களாக இடம்பெற்று வருகின்றன.

மொத்தமாக நேற்று வரை 17 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

You Might Also Like

யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!
இலங்கைக்கு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!
ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
கறி பனிஸில் லைட்டரின் உலோக பாகங்கள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 40 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்ட 34 மனித என்புத் தொகுதிகள் நீதிமன்றக் கட்டுக்காவலில் எடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி பிரணவனிடம் கையளிக்கப்பட்டன.

இவ்வாறு கையளிக்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சட்ட வைத்தியத்துறையில் உள்ள என்பு ஆய்வு கூடத்தில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட பாடசாலை புத்தகப் பை, பொம்மை, காலணி, சிறு வளையல் போன்ற பொருட்கள் நீதிமன்றக் கட்டுக்காவலில் சான்றுப் பொருட்களாகப் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன.

தற்போது அகழ்வுப் பணிகள் மாத்திரமே இடம்பெற்று வருகின்றன. எந்தப் பொருட்களையும் ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

முழுமையாக அகழ்வுப் பணிகள் நிறைவு பெற்றதன் பிற்பாடே மனித என்புத் தொகுதிகள் சட்ட வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினரால் ஆய்வு செய்யப்படும்.

அதன்பின்னர் இறப்புக்கான காரணம், மீட்கப்பட்ட குறித்த என்புத் தொகுதிகள் ஆணா, பெண்ணா மற்றும் வயது என்பன அறிவிக்கப்படும்.

மேலும் ஆகழ்வுகள் முடிவுற்ற பின் கிடைக்கப் பெற்ற பிற சான்றுப் பொருட்களின் கால எல்லையைத் தொல்லியல்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா வெளிப்படுத்துவார்.

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டுள்ளது. யாழ். பொலிஸார் 24 மணிநேரமும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளும் இந்த விடயங்களில் அக்கறை செலுத்தி தொடர்ந்தும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வருகின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article சிறி லங்கா குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளிப்படுத்திய விடயம்
Next Article பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் நீக்கப்படும்! நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி
விரைவில் சிறி லங்காக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள்!
செய்திகள்
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும் – நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு!
செய்திகள்
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்-அமைச்சர் விஜித ஹேரத்
அரசியற் செய்திகள்
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் கனடாவில் போராட்டம்
செய்திகள்
தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அணி திரள்விற்கு அழைப்பு !
செய்திகள்
இன்றும் தொடரும் அகழ்வு பணிகள்
செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.