செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் : இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் ஆபத்து

Last updated: ஜூன் 24, 2025 02:18
Share
SHARE

உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், அந்நிய செலாவணி இருப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்டவற்றை இலங்கை சந்திக்க நேரிடும் என்று பொருளாதார ஆய்வாளர் தயநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.

எரிபொருள் விலை சமநிலைப்படுத்தப்படாவிட்டால் பின்நாட்களில் ஏனைய விளைவுகள் ஏற்படக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது. அத்தோடு இராஜதந்திர ரீதியிலும் திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக இவ்வாறான நிலைமைகளால் இலங்கையில் பொருளாதார மந்த நிலைமை ஏற்படக் கூடிய அபாயமும் காணப்படுகிறது.

2028இல் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் கூடும். எனவே பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய பொருளாதார மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். எவ்வாறிருப்பினும் இறக்குமதி கட்டுப்பாடுகள் இதற்கு பொறுத்தமான தீர்வாக அமையாது.  

You Might Also Like

காலி தடல்ல பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி மற்றுமொருவர் காயம்!
வர்த்தக நிலைய கூடாரங்கள் தீயிடப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது!
தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலையை காப்பாற்றக்கோரி போராட்டம்
ஆண்டின் மிக குறுகிய நாள் இன்று!

ஆனால் உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையில் எரிபொருள் விலை சமநிலைப்படுத்தப்பட்டால், இறக்குமதிகள் இயல்பாகவே மட்டுப்படும்.

விலைகள் உயர்வடையும் போது அவற்றின் பாவனைகளும் படிபடிப்படியாகக் குறைவடையும். எரிபொருள் விலை அதிகரிக்கும் பட்சத்தில் ஏனைய இறக்குமதிகளுக்கான செலவினையும், எரிபொருள் இறக்குமதியில் உள்ளடக்க வேண்டும்.

இவ்வாறான நிலைமையில் முறையான நிதி முகாமைத்துவம் இல்லாவிட்டால் அந்நிய செலாவணி இருப்பிலும் அது தாக்கம் செலுத்தக் கூடிய வாய்ப்புள்ளது. அதனை விடுத்து நேரடியாக இறக்குமதிகளால் அந்நிய செலாவணி இருப்பிற்கு பாதிப்பு ஏற்படாது.

காரணம் ஏற்றுமதி வருவாய், சுற்றுலாத்துறை வருவாய் உள்ளிட்ட சேவை ஏற்றுமதியூடாக கிடைக்கப் பெறும் டொலர்களே இறக்குமதிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

ரூபாவின் பெறுமதியைப் பேணுவதும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாறாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
Next Article ஈரானின் திடீர் முடிவால் இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து
ஈரானின் திடீர் முடிவால் இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து
செய்திகள்
ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
செய்திகள்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.