செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி வருகின்ற 23, 24,25 ஆகிய திகதிகளில் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து கானாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து கானாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி யோகராசா கலாறஞ்சினி இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
நேற்று (21.06.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விளக்கு ஏந்திய போராட்டத்திற்கான அழைப்பு ஒன்றை அவர் விடுத்துள்ளார்.
இதன்போது அவர், அனைத்து தமிழ் மக்களும் எம்மோடு இணைந்து விளக்கு ஏந்தி போராட்டம் ஒன்றை மேற்கொள்ள ஒன்றிணைவோம் என அவர் கோரியுள்ளார்.


