திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

மீளப் பெறப்படாத வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி – அரசு புதுக்கதை !

Last updated: ஜூன் 13, 2025 11:03
Share
SHARE

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது குறித்து அமைச்சரவை அமைச்சர்களின் கருத்தினை அறியுமாறு சட்டமா அதிபரினால் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்திற்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என ஆளும் தரப்பின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் அவ்வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறவேண்டும் எனக்கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

அதே போன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படும் தமிழ்ப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது காணி அமைச்சர் லால் காந்தவினால் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது இவ்விவகாரம் பற்றி எந்தவொரு சிறப்பான கூற்றும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே இவ்வர்த்தமானி அறிவித்தல் நீக்கம் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குமாறு கோரி கடந்த மாதம் 26ஆம் திகதி கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் செயலாளர் டி.பி.விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார்.

இவ்வானதொரு பின்னணியில் இன்னமும் வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படாத நிலையில், இதுபற்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நீதி அமைச்சர் கர்சன நாணயக்காரவிடமும், பிரதமர் அலுவலகத்தின் உதவிச் செயலாளர் மிகிரி தென்னக்கோனிடமும் குறுந்தகவல் ஊடாக விளக்கம் கோரியிருந்தார்.

You Might Also Like

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று!
முன்னணியின் வேட்பாளர் இறுதி நேரத்தில் தமிழரசுக்கு கட்சி தாவல் வேட்புமனுத் தாக்கல்
ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாட்டை வினைத்திறனாக மேம்படுத்தத் திட்டம்!
சட்ட விரோத விகாரைக் காணிக்கு நட்ட ஈடு வழங்கி பௌத்த மயமாக்கத்திற்கு சட்ட அங்கீகாரம்

அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகத்தின் உதவிச் செயலாளர் மிகிரி தென்னக்கோன், இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களின் கருத்தினை அறியுமாறு சட்டமா அதிபர் காணி அமைச்சுக்கு அறிவித்திருக்கின்றார் எனவும், அதற்குரிய நடவடிக்கைகள் காணி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article தமிழினப் படுகொலைக்கு நீதி எங்கே? – ஜேர்மனியில் அனுரவிற்கு எதிராக முழக்கம்!
Next Article தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலையை காப்பாற்றக்கோரி போராட்டம்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.