திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவைக்கு சிங்களவர்கள் பெரும்பாண்மையாக நியமனம் !

Last updated: ஜூன் 13, 2025 13:27
Share
SHARE

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மீயுயர் சபையான பேரவையின் (University Council) 15 வெளிவாரி உறுப்பினர்களில் 7 இடங்களுக்கு சிங்களவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய எட்டு இடங்களில் 5 இடங்களுக்கு தமிழர்களும், 3 இடங்களுக்கு முசுலீம்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகமொன்றின் பேராசிரியர் நியமனங்கள், துணைவேந்தர் தெரிவு, விரிவுரையாளர்களை அமர்த்தவும் நீக்கவும் அதிகாரமுள்ள மீயுயர் சபையாக பல்கலைக்கழகப் பேரவை காணப்படுகின்றது. அந்தவகையில் வெளிவாரி உறுப்பினர்களில் பெரும்பாண்மையினராக சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுயாட்சியில் பாரிய செல்வாக்கினைச் செலுத்தும் சூழல் எழுந்தள்ளது.

ஏனைய தமிழ்ப் பல்கலைக்கழகமான விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 15 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்களவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டள்ளனர். அதேவேளை வவுனியாப் பல்கலைக்கத்தின் 07 வெளிவாரி உறுப்பினர்களில் 03 சிங்களவர்கள், 03 தமிழர்கள், 01 முசுலீம் என்ற அடிப்படையில் உறுப்பினர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் தொடர்ந்து ஆட்சிக்கும் வரும் ஒவ்வொரு அரசுகளும் வடக்கு – கிழக்கின் ஒவ்வொரு நிர்வாகக் கட்டமைப்புக்களையும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சிங்களமயப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது ஆறும் ஜே.வி.பி அரசு நிர்வாகக் கட்டமைப்புக்களிற்கு மேலதிகமாக கல்வி நிறுவனங்களையும் சிங்களமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

வடக்கு – கிழக்கின் பிராந்திய பண்பாட்டுப் பல்கலைக்கழகங்களாக விளங்கும் யாழ்ப்பாண, கிழக்கு, வவுனியாப் பல்கலைக்கழங்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்ற அடிப்படையில் சிங்களமயமாக்கப்படும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலையை காப்பாற்றக்கோரி போராட்டம்
Next Article செம்மணி புதைகுழி விவகாரத்தில் உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.