யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பபட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது மக்களின் ஏற்பட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
புற்றுநோய் பிரிவின் மீது முன்வைக்கப்படும் அழுத்தம் மற்றும் வைத்திய நிர்வாகியை மாற்றல் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கோசங்களை எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எங்கள் வைத்தியசாலையை மீட்டு எடுப்போம், புற்று நோய் பிரிவை காப்பாற்றுவோம் என்பது பிரதான கோசமாக முன்வைக்கப்பட்டது.


