சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் போட்டியிட்டு உறுப்பினர்களாக தேர்வான இருவருக்கு எதிராக தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளிற்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் போட்டியிட்டு உறுப்பினர்களாக தேர்வான இருவர் அந்த சபை எல்லைப் பரப்பிற்குள் தம்மை ஓர் வாக்காளராக பதிவு செய்வதற்கு தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புறுமைகளை இரத்து செய்ய தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு உத்தரவிடக்கோரி இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இந்த இரு வழக்கும் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வான இரு உறுப்பினர்கள் சார்பிலும் சிரேஸ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் ஆயராவதோடு வழக்குத் தொடுநர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சுரேன் பெணான்டோ முன்னிலையாகின்றனர்.
அவர்களது நியமனத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டால், சாவகச்சேரி நகரசபையில் இலங்கை தமிழரசு கட்சி, ஈ.பி.டி.பி கூட்டணியும், தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கூட்டும் சமமான- தலா 7 ஆசனங்களை கொண்டிருக்கும். ஏதாவதொரு தரப்பிலிருந்து பல்டியடிக்கும் உறுப்பினர் வெற்றியை தீர்மானிப்பார். அல்லது திருவுளச்சீட்டு முறை கையாளப்படும்.
சாவகச்சேரி நகரசபையில் ஒரு உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டாலும், சைக்கிள், சங்கு கூட்டணி அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுக்க முடியாது. சைக்கிள், சங்கு கூட்டணி 11 உறுப்பினர்களையும், வீடு, வீணை, மான் கூட்டணி 10 உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்.
