ஜனாதிபதி சட்டத்தரணி என்று கூறிக் கொண்டு போலியாக அலையும் சுமந்திரன் போன்றவர்கள் அரசியல் தலைவர்கள் அல்ல என எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரனால் தமிழ் சமூகத்தை வளர்க்க முடியுமா? அவர்களுக்கான பாடுபடத்தான் முடியுமா என்பது கேள்விக்குறியே.
மேலும் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின் யாழ்.மாநகர சபையை கைப்பற்றுவதற்கு ஒரு பேராசையுடன் பல அரசியல் தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.
அத்தோடு அடுத்ததாக நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தலில் சுமந்திரன் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
