திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழி முதற்கட்ட அகழ்வுப் பணி நிறைவிற்கு வந்தது !

Last updated: ஜூன் 7, 2025 14:47
Share
SHARE

செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் கடந்த 09 நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த மனிதப்புதைகுழி தொடர்பான பரீட்சாத்த அகழ்வுப்பணி (pit test) இன்றுடன் (07.06.2025) நிறைவுக்கு வருகின்றது. இதுவரையிலான பரீட்சாத்த அகழ்வுப்பணியில் மொத்தமாக 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு மீட்க்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து இந்த மனிதப்புதைகுழியை அகழ்வு செய்வதற்கு 45 நாட்கள் நீடிப்பை சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் நேற்று கூறியிருந்த நிலையில் அதற்க்கான செலவீட்டு பாதீட்டினை உடனடியான மன்றில் சமர்ப்பிக்குமாறு கட்டளை ஆக்கியிருந்த நிலையில் இன்றையதினம் அடுத்தகட்ட ஆய்வுக்கான பாதீடு மன்றில் சமர்ப்பிக்கப்படுள்ளது.

புதைகுழி அகழ்வு இடம்பெற்றுவரும் இடத்தை தவிரவும் அதனை அண்டிய சூழலில் சந்தேகத்துக்கிடமான இடமாக கருதப்பட்டு தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவ அவர்களினால் நீதிமன்றில் செய்மதிப் படம் மூலம் நீதிமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக ட்ரோன் கமெரா மூலமாக இன்றையதினம் படமாக்கப்பட்டு ஆய்வுக்காக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களிடம் கையளிக்கப்படுள்ளது.

அடுத்தகட்ட அகழ்வு நடவடிக்கை ஜீன் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என உத்தேசிக்கப்படுள்ளது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article சந்திக்கும் இடம் முக்கியமல்ல ! – ஈபிடிபி சந்திப்புத் தொடர்பில் சுமந்திரன் புதுக்கதை
Next Article தன்னிலை மறந்து தன்நாமம் கெட்டு மாற்றான் வீட்டுப் படியேறும் காலம்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.