திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

எரிபொருள் விநியோகத்தர்களுக்கான 3 சதவீத கழிவை இரத்து செய்யும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை-நளிந்த ஜயதிஸ்ஸ

Last updated: மார்ச் 2, 2025 16:36
Share
SHARE

எரிபொருள் விநியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 3 சதவீத கழிவை இரத்து செய்யும் தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாட்டில் நாளொன்றுக்குத் தேவைப்படும் அளவை விடவும் இரண்டு மடங்கு எரிபொருள் நேற்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது

இந்த நிலையில்,இன்று பல எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வழமை போன்று இயங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திற்கும் எரிபொருள் விநியோகத்தர்களுக்கும் இடையிலான தற்போதைய விநியோக ஒப்பந்தத்தின்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு வீற்றர் எரிபொருளுக்கும் வழங்கப்படும் மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து,3 சதவீத கழிவு கொடுப்பனவு பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரையில் புதிய எரிபொருள் முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இலங்கை கனியவள விநியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகே நீண்ட வரிசை காணப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

You Might Also Like

தமிழினப் படுகொலை தூபி சேதம் ! – கனேடிய அரசு அதிரடிக் கைது
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் நற்செய்தி!
கனேடிய அமைச்சர் ஆனந்தசங்கரியைச் சந்தித்த சிறீதரன் எம்.பி
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது!

இருப்பினும்,குறித்த நிலைமை இன்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article புதிய கூட்டணியால் தமிழரசுக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை-எம்.ஏ.சுமந்திரன்
Next Article இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.