2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று நாடாளுமன்றில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த விவாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், 21 ஆம் திகதி மாலை 6 மணிக்குப் பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறும்.
இன்றைய குழுநிலை விவாகத்தில் ஜனாதிபதி, பிரதமர், சுயாதீன ஆணைக்குழுக்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட 25 செலவு தலைப்புகள் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, கடந்த 25 ஆம் திகதி பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதன்போது, பாதீட்டுக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
