நாட்டில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் சுருத்துத் தெரிவிக்கப்பட்டது.
எதிர்க் கட்சித் தலைவர் இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.
இந்த சம்பவங்களை ஜனாதிபதி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்று கூறினாலும் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் நடைபெற்றுவரும் இந்த கொலைச் சம்பிரதாயங்கள் உண்மையில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என சபையில் சுட்டிக்காட்டினார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் தகவல் கிடைத்திருந்த போதிலும் புகைப்படத்துடன் கூடிய அறிக்கை கிடைத்திருந்த போதிலும் பாதுகாப்பு சிதைவடைந்தமை தொடர்பில் தெளிவான விளக்கத்தைப் பிரதமர் வழங்க வேண்டும் என எதிரக் கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் இந்த சம்பவத்தை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் வரையில் கொண்டு செல்ல தயார் இல்லை என தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகப் பிரதமர் கூறினார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவித்திருந்தார்.
விசாரணைகள் மீது நம்பிக்கை வைக்குமாறும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
