திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தொகுதி ரீதியான கலந்துரையாடல்களை ஆரம்பித்தது தமிழரசுக் கட்சி!

Last updated: பிப்ரவரி 20, 2025 09:14
Share
SHARE

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் சம்பந்தமாகத் தொகுதி ரீதியாக இலங்கை தமிழரசுக் கட்சி கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தொகுதி ரீதியாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதுடன், மாவட்ட ரீதியாகக் கலந்துரையாடி இறுதி தீர்மானங்கள் எட்டப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள முறைமை தொடர்பில் தங்களது உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்படுவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய தேர்தல் முறைமைக்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்களில் தனியானதொரு கட்சி ஆட்சியமைக்க முடியாது என்பதனை அனைவரும் இப்பொழுது புரிந்துள்ளனர்.

இந்தநிலையில் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாள வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

இதனடிப்படையிலேயே தொகுதி ரீதியான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

சிறிலங்கா அரசிடம் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் வைத்த கோரிக்கை
வன்னி பாடசாலைகளிலுள்ள வளக்குறைகளைச் சுட்டிக்காட்டிய ரவிகரன் எம்.பி
அர்ஜூன் மகேந்திரன் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு!

சில இடங்களில் தனியாகவும் சில இடங்களில் மாற்று அணுகுமுறையைப் பின்பற்றியும் தேர்தலில் போட்டியிட வேண்டிய தேவையும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அடிப்படையில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தாமும் கட்சியின் தலைவரும் தயாராகி வருவதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவுக்கு நீதிமன்றத்தில் 22 வழக்குகள்!
Next Article அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட மதுபானசாலைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – இராசமாணிக்கம் சாணக்கியன்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.