காங்கேசன்துறையில், அடுத்த மாதம் உப்பு உற்பத்தி நிலையமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், எதிர்வரும் வருடத்தில் நாட்டில் நூற்றுக்கு 70 சதவீதமான உப்பு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இரண்டு உப்பு உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும் அதற்குத் தாம் உறுதியளிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது உப்பு தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளோம் அதனை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும்.
இதற்காக உப்பு நிறுவனங்களை அமைக்கவுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
