யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் மற்றுமொருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த இரண்டு முறைப்பாடுகளும் மீளப் பெறப்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பிலிருந்து யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த இரு தரப்பினரும் இந்த பிரச்சினையைச் சமரசத்துடன் முடித்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் மற்றுமொரு நபரும் தாக்கல் செய்திருந்த முறைப்பாடுகள் நேற்று(14) மீளப் பெறப்பட்டுள்ளன.
