திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

யாழ். பல்கலை உபவேந்தருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

Last updated: பிப்ரவரி 14, 2025 19:12
Share
SHARE

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிறிசற்குணராசா கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம் மற்றும் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமக்கு எதிராகப் பிரதிவாதிகளால் விதிக்கப்பட்ட வகுப்புத்தடையை சவாலுக்கு உட்படுத்திக் குறித்த மாணவன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கலைப்பீட பீடாதிபதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய தமக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தம்மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி சில கோரிக்கைகளை முன்வைத்துத் தாம் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

பின்னர் அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கமும் வகுப்பு புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தது.

You Might Also Like

சுது கங்கையில் வீழ்ந்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
ஆபிரிக்கப் நத்தைகளால் பேராபத்து விளையும் – பொ.ஐங்கரநேசன்
சில அத்தியாவசிய பொருட்களின் விலையில் திருத்தம்!
ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புகளை பெறுவது தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

இதனையடுத்து இடம்பெற்ற பல்கலைக்கழகத்தின் பேரவை கூட்டத்தில் குறித்த கோரிக்கைகளை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்!
Next Article போலி ஆவணங்களுடன் பயன்படுத்தபட்டு வந்த வாகனங்கள் மீட்பு
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.