2025 ஆம் ஆண்டுக்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி புதுப்பிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கட்சியைப் புதுப்பிக்கும் வகையில் புதியவர்கள் உட்பட 9 மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்கியின் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள். 2025 ஆம் ஆண்டுக்காகக் கட்சி புதுப்பிக்கப்படுகிறது. நான் இதற்கு முன் மாவட்டத் தலைவராக இருக்கவில்லை. இப்போது குருநாகல் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
புத்தளம் மாவட்டத்துக்கு ஹெக்டர் அப்புஹாமி மாத்தளை மாவட்டத்துககு ரோஹிணி, களுத்துறை மாவட்டத்துக்கு அஜித் பி பெரேரா, கம்பஹா மாவட்டத்துக்கு ஹர்ஷண ராஜகருணா, அநுராதபுரம் மாவட்டத்துக்கு ரோஹண பண்டார. காலி மாவட்டத்துக்கு கயந்த கருணாதிலக, மொனராகலை மாவட்டத்துக்கு ரஞ்சித் மத்துமபண்டார, திருகோணமலை மாவட்டத்துக்கு இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் இன்று மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். என்றார்.
