யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி குறித்த விகாரைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடியை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
