கொட்டாஞ்சேனை புனித பெனடிக் பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 4 காவல்துறை குழக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உந்துருளியில் பிரவேசித்த இருவர், கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தை பகுதியில் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.
சம்பவத்தில் படுகாயமடைத்தவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
உந்துருளியில் பிரவேசித்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றதாக காவல்துறை ஊடபேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
