சட்டமா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை ஜனாதிபதி இன்று கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக வர்த்தக வாணிப உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபரின் வழங்கிய பரிந்துரை குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதியை நிலைநாட்ட ஒருபோதும் பின்னிற்காது.
அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்தவகையில் ஊடகவியலாளர் வசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபரின் வழங்கிய பரிந்துரை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
சட்டமா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை ஜனாதிபதி இன்று கலந்துரையாடலுக்காக அழைத்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
