சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இன்று இரத்ததான நிகழ்வொன்று இடம்பெற்று வருகின்றது.
சிறைச்சாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமான குறித்த இரத்ததான நிகழ்வு பிற்பகல் 3 மணி வரை இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
