திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

தமிழரசுக் கட்சியின் 3 எம்.பிகள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு!

Last updated: பிப்ரவரி 3, 2025 17:02
Share
SHARE

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளை ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டங்களில் ஈடுபட இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இதற்கான தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் அ.அமலநாயகி, சிவில் சமூக செயற்பாட்டாளர் இ.செல்வகுமார் உள்ளிட்ட எழுவருக்கு இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழர்களுக்கான உரிமையினை வவியுறுத்தி சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அறிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வடகிழக்கில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக நாளைய தினம் மட்டக்களப்பில் பேரணிக்கும் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் கிழக்கு மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கைது!
முன்னணியின் வேட்பாளர் இறுதி நேரத்தில் தமிழரசுக்கு கட்சி தாவல் வேட்புமனுத் தாக்கல்
தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்!
அனுர அரசின் SLRC தலைவர் பதவி விலகல் !

அத்துடன் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதனைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் மட்டக்களப்பு நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் அனுமதியளிக்கக் கூடாது எனக் கோரி மட்டக்களப்பு தலைமையக காவல்துறையால் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக அனுராதபுரம் தலைமை நீதிவான் காவல்துறைக்குப் பிறப்பித்த உத்தரவு!
Next Article டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து ஆசியப் பங்குச் சந்தையின் குறியீடுகள் வீழ்ச்சி!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.