திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து ஆசியப் பங்குச் சந்தையின் குறியீடுகள் வீழ்ச்சி!

Last updated: பிப்ரவரி 3, 2025 17:15
Share
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா, மெக்சிக்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அறிவித்ததனை அடுத்து ஆசியப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

குறிப்பாக ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச்சந்தையின் குறியீடுகள் சரிவை வெளிப்படுத்தியுள்ளன.

ஹொங்கொங் பங்குச்சந்தை நிறுவனங்கள் ஆரம்பத்தில் 2 வீதத்திற்கும் அதிக சரிவை எதிர்நோக்கிய போதிலும், பின்னர் ஓரளவு மேம்பட்டதாக வர்த்தக தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கனேடிய மற்றும் மெக்சிக்கன் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளையும், சீன பொருட்களுக்கு 10 சத வீத வரியையும் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.

அவரின் இந்த திடீர் நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாகக் கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்கப் பொருட்களுக்கு, தங்கள் சொந்த வரிகளை அறிவித்துள்ளன.

சீனா உடனடியாக பதில் நடவடிக்கைகளை எடுக்காத போதிலும் கட்டாயமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளது.

You Might Also Like

தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல் கைது !
புதிய கட்சி தொடங்கும் எலான் மஸ்க்? டிரம்ப் இற்கு ஆப்பு! 81% பேர் ஆதரவு!
ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் – பலர் பலி!
சப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – தேர்தல் 27

எப்படியிருப்பினும் சீனா, மெக்சிக்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகள், அமெரிக்காவின் முதல் மூன்று வர்த்தக பங்காளிகளாகும்.

அதேவேளை, அமெரிக்கச் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின் இரண்டு அதியுயர் பாதுகாப்பு அதிகாரிகளை டிரம்ப் நிர்வாகம் பதவி விலக்கியுள்ளது.

இந்த அமைப்பின் சுதந்திர தன்மையை ஒழித்து அதனை வெளியுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், ஏராளமானவர்கள் தங்கள் பதவியினை இழக்க நேரிடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய ரீதியாக பில்லியன் கணக்கான டொலர் செலவில் உயிர்காக்கும் உதவிகளுக்கு நிதி உதவி செய்துவரும் யூ.எஸ் எயிடுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article தமிழரசுக் கட்சியின் 3 எம்.பிகள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு!
Next Article தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் – ஜனாதிபதி
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.