யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த உணவு தவிரப்பு போராட்டம் இன்றையதினம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும். நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளை பாரபட்சமின்றி விசாரணை செய்ய வேண்டும்.
மாணவர்களின் கற்றலுக்கான சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 2 நாட்கள் உணவு தவிரப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் நீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பல்கலைக்கழக பேரவையினால் வழங்கப்பட்ட உறுதிப்பாட்டையடுத்து, பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
