திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

வடக்கு,கிழக்கில் முப்படை வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்- செல்வம் எம்.பி

Last updated: ஜனவரி 23, 2025 11:55
Share
SHARE

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்த விடயத்தை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நல்ல விடயங்களுக்குத் தாம் ஆதரவு வழங்குவதாகவும் அடைக்கலநாதன் கூறினார். செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இந்த விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் வாசஸ்தலங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானங்களையும் தாம் வரவேற்பதாகக் கூறினார்.இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற வேண்டும் எனவும் எதிர்வரும் தேர்தலுக்கான யுக்தியாக இந்த விடயங்கள் அமைந்து விடக்கூடாது எனவும் அரசாங்கத்தை செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியிருந்தார்.

தூய்மையான ஒரு திட்டத்தை முன்னெடுக்கும் அரசாங்கம் பலதரப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்தும் போதே இந்த திட்டத்தில் வெற்றியடைய முடியும் என சுட்டிக்காட்டினார்.

வடக்கு,கிழக்கில் உள்ள மக்களின் காணிகளை முப்படையினர் அபகரித்துள்ளதாக சபையில் சுட்டிக்காட்டினார். முப்படைகள் மக்களின் காணிகளை அபகரிக்கும் விடயத்தை ஒழிக்க வேண்டும் எனவும் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கப்பட வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.

இவற்றை நடைமுறைப்படுத்துமிடத்து க்ளீன் ஸ்ரீலங்கா எனும் திட்டம் மேலும் வளர்ச்சியடையும் எனக் குறிப்பிட்டார்.

You Might Also Like

சாவகச்சேரி நகரசபை: சைக்கிள் கூட்டுக்குள் களேபரம்; ஜேவிபி அலுவலகத்துக்கே சென்று ஆதரவு கோரிய தமிழரசு!
2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று!
சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு!
கஜேந்திரகுமார் எம்.பிக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article சினோபெக் தொடர்பில் உள்ளூர் சதவீத உடன்பாட்டுக்கு ஒரு மாத அவகாசம் கோரும் விஜித ஹேரத்!
Next Article இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.