சீன ஜனாதிபதி ஜின்பிங்கின் (Xi Jinping)அழைப்பின் பேரில் சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூரவ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (16) காலை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “Invest in Sri lanka round table meeting 2025 முதலீட்டு அமர்வில் கலந்துகொண்டார்.
சீனா டியான்யிங் இன்கோபரேசன் சீன ஹார்பர் பொறியியல் நிறுவனம் சீன தொலைத் தொடர்பு நிரமாண கம்பெனி லிமிடெட் சீனா பெட்ரோ கெமிக்கல் கூட்டுத்தாபனம் மெடலர்ஜிகல் கோபரேசன் ஓப் சைனா நிறுவனம், சீவ சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனம் சீனா எனர்ஜி இன்டர்நெசனல் குழும நிறுவனம் மற்றும் குவாங்க பொதுப்போக்குவரத்து குழுமம் உட்பட பல் முன்னணி சீன நிறுவனங்கள் இந்த முதலீட்டு அமர்வில் பங்கேற்றன.
அதனையடுத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீன மக்களின் மாவீரர் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தவுள்ளதுடன் இன்று பிற்பகல் சீனப் பிரதமர் லீ சியாங் மற்றும் சீன தேசிய காங்கிரஸ் தலைவர் ஜாவோ வஜி ஆகியோருடனும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வுகளில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜிக் ஹேரத், போககுவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
