சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டில் இருந்து புறப்பட்டார்.
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிரவரும் 17 ஆம் திகதி வரை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீனாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
