திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

காவல்துறையினால் அமுல்படுத்தப்பட்ட இரு போக்குவரத்து திட்டங்கள்!

Last updated: ஜனவரி 5, 2025 09:02
Share
SHARE

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கமைய வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் காவல்துறையினால் இரண்டு போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் ஆரம்பமான இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு முன்னோடி திட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, வீதியில் பயணிக்கும் ஏனைய வாகனங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி மற்றும் ஒளி எழுப்புவதனை தடை செய்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விபத்துகளின் போது ஆபத்துக்களை அதிகரிக்கக் கூடிய வகையில் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள அநாவசிய உதிரிப்பாகங்களைத் தடை செய்வது குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது

எவ்வாறாயினும், இந்த விடயங்களுக்காகக் குறித்த 2 வார காலப்பகுதியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக வாகன சாரதிகளுக்கான தெளிவுபடுத்தல் நடவடிக்கையே முன்னெடுக்கப்படவுள்ளது.

You Might Also Like

ஆண்டின் மிக குறுகிய நாள் இன்று!
யாழ் சிறைச்சாலையில் இடம்பெற்று வரும் இரத்ததான நிகழ்வு!
சிறி லங்காவிலுள்ள இந்தியன் வங்கிக்கு அபராதம் விதித்த சிறி லங்கா மத்திய வங்கி!
கறி பனிஸில் லைட்டரின் உலோக பாகங்கள்!

இதனிடையே, அநாவசிய உதிரிப்பாகங்களுடன் பயணிக்கும் வாகனங்களிலிருந்து அவற்றை அகற்றுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article உலகின் மிக வயதான பெண் 116 ஆவது வயதில் காலமானார்!
Next Article பெர்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் மேலும் 06 மாதங்களுக்கு இடைநிறுத்தம்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.