திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

நாடளாவிய ரீதியில் ஆழிப்பேரலை நினைவேந்தல்கள் அனுட்டிப்பு!

Last updated: டிசம்பர் 26, 2024 08:49
Share
SHARE

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் சிக்குண்டு 35,000 அதிகமானோர் உயிரிழந்ததுடன், ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்.

இலங்கை எதிர்கொண்ட பாரிய இயற்கை அனர்த்தமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

அதன்படி, 2005 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி முதல் தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இதன்படி, காலி ஆழிப்பேரலை நினைவுத்தூபிக்கு முன்பாக தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

வல்வெட்டித்துறையில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
யாழ்.வழுக்கையாறு விவகாரம் : ஆய்வை முன்னெடுத்த பல்கலைக்கழக மாணவர்கள்
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – விசாரணை செய்ய 4 குழுக்கள் நியமனம்!
நாட்டில் கொவிட் 19 புதிய திரிபினால் பாதிக்கப்பட்டு 2 பேர் பலி

குறித்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குழுவொன்றும் கலந்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுனாமி பேபி என்றழைக்கப்படும் அபிலாஷ் கல்முனையில் உள்ள அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், சுடர் ஏற்றப்பட்டும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்திலும் தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் -வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியிலும் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மூதூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் இன்று மூதூர் இறங்குதுறைமுக வாசலில் ஆழிப்பேரலை நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, உயிர்நீத்தவர்களுக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஹட்டன் உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளிலும் ஆழிப்பேரலையினால் உயிர்நீத்தவர்களுக்கான ஆத்ம சாந்திக்காக பொதுமக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன். சுடர் ஏற்றப்பட்டும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article இன்று 18 மணித்தியால நீர் விநியோகத் தடை!
Next Article சீன அரசாங்கத்தினால் சிறி லங்காவிற்கு 552 மில்லியன் ரூபாய் நிதி உதவி!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.