திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
கருத்துக்கள்பூகோள அரசியல்

அசாத் அரசின் சரிவு ஏற்படுத்தும் பிராந்திய, உலகளாவிய அதிர்வலைகள் 

சிரியாவினை தசாப்தங்களாக ஆட்சி செய்து வந்த பசார் அல்-அசாத்தின் அரசு, முற்றிலுமாக கவிழ்க்கப்பட்டு தக்ரிர் அல்-சாம் அமைப்பினால் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிராந்திய மற்றும உலகளாவிய பூகோள அரசியல் நிலவரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்வாட்சிக்கவிழ்ப்பின் விளைவானது பிராந்திய அரசியலில் உறுதிப்பாடற்ற தன்மையை ஏறப்டுத்தும் அதே வேளை பிராந்திய அதிகரத்துக்கான போட்டிக்களமாகவுமே இருக்கப்போகிறது.

Last updated: டிசம்பர் 26, 2024 15:28
Share
SHARE

அரபு வசந்த புரட்சியினை தொடர்ந்து,  தசாப்தத்தினை தாண்டி முன்னெடுக்கப்பட்டு வரும் அசாத் அரசுக்கெதிரான போராட்டத்தில், கடந்த நாட்களில் தக்ரிர் அல்-சாம் எனும் இசுலாமிய அமைப்பு, சிரிய அரசின் ஆட்சியை வீழ்த்தி புதிய திருப்புமுனையை நிகழ்த்தியிருக்கிறது.

Abu Muhammad al-Jawlani (Leader)
Hay’at Tahrir al-Sham

யாரும் இலகுவில் எதிர்பார்த்திராத இந்த நிகழ்வு, அசாத்-சிரிய ஆட்சிக்கட்டமைப்புக்குள் இருந்த நலிவான தன்மைகளையும், தசாப்தங்கள் கடந்த கருத்தியல் உட் பிளவுகளையும் மற்றும் அரசியல், பொருண்மிய பின்னடைவுகளையும் வெளிச்சத்தில் காட்டியிருக்கிறது. ஆரம்பத்தில் ரசிய, ஈரானிய மற்றும் கிசுபுல்லா (Hezbollah) ஆகிய தரப்புகளின் ஆதரவில் கட்டமைக்கப்பட்டிருந்த அசாத் அரசு, உட்பிளவுகள், பிராந்திய அதிகார போட்டிகள் மற்றும் சில சர்வதேச நகர்வுகளால் முற்றிலும் உடைக்கப்பட்டிருக்கிறது.

அசாத்தின் வீழ்ச்சியானது அவரது பாஅத் (Ba’ath) கட்சியின் வீழ்ச்சியாக அல்லது பாஅத் கருத்தியலின் முடிவாக மட்டும் அல்லாமல், சிரியா எனும் தேசம் பிரிவுகளுக்குட்படும் பாதுகாப்பற்ற சூழலை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட பல்வேறு ஆயுத, அரசியல் அமைப்புக்கள் சிரியாவின் எதிர்காலம், நவீனமயமாக்கல், மீள்கட்டுமானம் பற்றி உறுதியளித்தாலும், நடந்துகொண்டிருக்கும் குழுவாத வன்முறைகள், பழங்குடிகளுக்கிடையான மோதல்கள் மற்றும் யுத்தப்பிரபுத்துவம் என்பன, சிரியாவின் எதிர்காலம் என்பது இருளுக்குள் தள்ளப்படலாம் என்பதையே காட்டி நிற்கின்றன. இப்பிராந்தியத்தில் வல்லமை பொருந்தியவர்களாக இருக்கும் துருக்கி, ஈரான் மர்றும் இசுரேல் ஆகிய நாடுகள் சிரியா ஏற்படுத்தியிருக்கும் பிராந்திய அதிகார இடைவெளியை நிரப்பவே முயல்கின்றன என்பதால், இந்த நகர்வுகள் சிரிய தேசத்தின் மீள் எழுச்சிக்கான மற்றும் உறுதிப்பாடுடைய தேசத்துக்கான நகர்வை மேலும் சிக்கலாக்குகின்றன,

உலக அளவில் இதன் விழைவுகள் ஆழமானவை. ஈரானைப்பொறுத்தவரையில் சிரியாவின் அதன் ஆதிக்கத்தை இழப்பதென்பது, ஈரானின் பிராந்திய ஆளுக்கைக்கான வலுவிற்கு கிடைக்கும் பெரும் பின்னடைவாகும். இதற்கிடையில் துருக்கி, சிரிய தேசத்தில் வாழும் குர்திசு இன (Kurdish) மக்களின் போராட்ட நியாயப்பாட்டினை எதிர்த்து சிரிய தேசத்தில் தன் செல்வாக்கை மேம்படுத்தியும் விரிவுபடுத்தியும் தனது காலூன்றலை வலுவாக்க நகர்வுகளை மேற்கொள்கின்றது. இன்னொரு புறத்தே இசுரேல், தனது எல்லைகளை பாதுகாக்கவென, சிரிய படைத்துறை வளங்களை அழிப்பதன் மூலம், ஒரு படைய நகர்வை உடனடியாகவே ஆரம்பித்திருக்கிறது.

இங்கு உலகளாவிய ரீதியில் வல்லரசு நாடுகளின் தாங்கங்களின் பங்கே அதிகம். ரசியா தனது ஒரு மூலோபாய கூட்டாளியின் இழப்பினை எதிர்கொள்கின்றது. இது ரசியாவின் மத்திய கிழக்கு மீதான செல்வாக்கினில் பின்னடைவுகளை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா இந்த விடயத்தில் இரு பக்கங்களுடன் நகர்கிறது. அமெரிக்கா சிரியாவில் ஈரானின் செல்வாக்கை சேதப்படுத்துவதன் மூலம், ஈரானின் பிராந்திய செல்வாக்கில் சரிவினை ஏற்படுத்த, சிரியாவின் கிளர்ச்சி அமைப்புகளை பலப்படுத்தும் நோக்கில் நகர்வதுடன், மறுபுறம் அந்த கிளர்ச்சி அமைப்புகளால் தாம் ஏதிர்கொள்ளக்கூடிய சவால்கலையும், ஆபத்தையும் எதிர்கொள்கிறது. புவியியல் அடிப்படையில் இப்பிராந்தியத்தில் சற்று தொலைவில் உள்ள சீனா, அதன் நீண்டகால முயற்சியான பட்டுப்பாதை (Belt and Road Initiative – BRI) ஈரானில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் எதிர்கொள்ளப்போகும் சவால்களை எதிர்நோக்கியுள்ளதுடன், அசாத்-சிரிய ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட ஊய்குர் (Uyghur) துருக்கித்தான் இசுலாமிய கட்சி (Turkistan Islamic Party -TIP) போராளிகளினால் அதன் யின்யியாங் (Xinjiang) மாகாணத்தில் ஏற்பட்டிருக்கும் இசுலாமிய கிளர்ச்சி ஏற்படுத்தப்போகும் விளைவுகளையும் கவனித்தபடி இருக்கிறது.

தற்போது நடந்துள்ள அசாத்-சிரிய ஆட்சிக்கவிழ்ப்பானது, எவ்வாறு ஒரு தேசத்துள் நடைபெறும் மோதல் நிகழ்வுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய அதிகார போர்களை தூண்டலாம் அல்லது இதன் மாறுதலாக எவ்வாறு பிராந்திய மற்றும் உலகளாவிய அதிகார போட்டிகள், ஒரு தேசத்தின் இயங்கு நிலையை குலைப்பதினூடாக அல்லது மாற்றத்திற்குட்படுத்துவதினூடாக முன்னெடுக்கப்படும் என்பதனை வெளிப்படையாகவே காட்டி நிற்கின்றது.

You Might Also Like

மியன்மார் உள்நாட்டுப் போர்: புதிய பருவம், புதிய முன்னேற்றங்கள்?
தன்னிலை மறந்து தன்நாமம் கெட்டு மாற்றான் வீட்டுப் படியேறும் காலம்!
இலட்சக்கணக்கானோருக்கு பார்வை வழங்கிய பிரெய்லி
வங்காளதேசம்: நவ தாராளமயத்தின் தோல்வி

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:assadgeopoliticsiranIsraelmiddle-eastsyria
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article வல்வெட்டித்துறையில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
Next Article 2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.