திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

ரணில் மீது குற்றச்சாட்டு – டலஸ் அநுரவுக்கு கடிதம்

Last updated: டிசம்பர் 9, 2024 10:00
Share
2 Min Read
SHARE

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க எவ்வித நியாயமான காரணமும் இன்றி தேர்தலை ஒத்திவைத்தார் எனவும், இதுவொரு கூட்டு ஊழலுக்குப் பிறகு செய்யப்பட்ட அரசியல் கருக்கலைப்பு மற்றும் நிதி ரீதியாக செய்யப்பட்ட பொருளாதாரக் கொலை என்று சுதந்திர மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் டலஸ் அழகப்பெருமவினால் சிறிலங்காவின் அரச தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக செலவிடப்பட்ட 72 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் விரயமானது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் எனவும் சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில்;
’22 மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோரவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி, மாற்றத்தை மீட்சியாக மாற்றும் இந்த முடிவு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்களின் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் வெற்றிடத்தை மறைக்கும் நோக்கத்துடன் தன்னிச்சையாக 2023 ஜனவரி இறுதி வாரத்தில் எடுக்கப்பட்ட தேர்தலை இரத்து செய்ய தீர்மானித்ததன் காரணமாக, அரசாங்கம் எழுபத்தி இரண்டு கோடி ரூபாவிற்கும் (720,000,000/=) செலவு செய்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பணம் விரயமாகும் என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டி இதுவரை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அப்போது மதிப்பிடப்பட்ட மொத்தச் செலவு 8 பில்லியன் ரூபாய் (8,000,000,000/=). அதன்படி, நியாயமான காரணமின்றி இவ்வாறு வீணடிக்கப்பட வேண்டிய மொத்தப் பணமானது, எதிர்பார்க்கப்படும் மொத்தச் செலவில் 10% என்பது தெளிவாகிறது. இந்த வரம்பற்ற செல்வம் என்பது ஆட்சியாளர்கள் தங்கள் சொத்துக்களின் வருமானத்திலோ அல்லது அவர்களது குடும்பக் கணக்கில் இருந்து ஒதுக்கப்பட்ட பணத்திலோ சம்பாதித்தது அல்ல, மாறாக மக்களின் வரிப் பணம் ஆகும்.

You Might Also Like

வேட்பு மனு நிராகரிப்பு; தவிடுபொடியான வியாழேந்திரனின் கனவு
தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 18 ஆம் திகதி!
சர்ச்சையில் சிக்கிய சிறிலங்காவின் சபாநாயகர் பதவி விலகல் !
SJBயுடன் இணைந்து செயல்பட UNP இணக்கம்!

அன்றைய தினம், தேர்தல் ஆணையத்தையும், ஆணையர்களையும் திட்டி, தேர்தல் நடத்த உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தையும், அதன் நீதிபதிகளையும் அவமதித்து, தேர்தலுக்கு கருவூலத்தில் பணம் இல்லை என்று கூறி, கடைசியில், வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என, பாராளுமன்றில் அநாகரிகமான அறிக்கைகளை வெளியிட்டார்.

தனது சொல்லப்படாத அரசியல் மோகத்தைப் போக்கிக் கொள்ள விரும்பிய ஜனாதிபதி, தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் தேர்தலை ஒத்திவைக்க முடிவெடுத்திருப்பது அரசியல் ரீதியாக இன்னும் மூர்க்கத்தனமானது. ஜனநாயக அர்த்தத்தில் எந்த நியாயமான காரணமும் இல்லாமல் தேர்தலை ஒத்திவைப்பது கூட்டு ஊழலுக்குப் பிறகு அரசியல் கருக்கலைப்பு, நிதி ரீதியாக இது பட்டப்பகலில் பொருளாதாரக் கொலை என்பது இப்போது தெளிவாகிறது.’

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article ஆசாத் ஆட்சி முடிவை வரவேற்கும் இஸ்ரேல் பிரதமர்
Next Article தென்கொரிய அரச தலைவருக்கு பயணத்தடை
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.