திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

மாற்றம் எங்களிடமிருந்தே வரவேண்டும் தென்னிலங்கையிலிருந்தல்ல ! – யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் சாடல்

Last updated: நவம்பர் 10, 2024 12:44
Share
3 Min Read
SHARE

புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டே உண்மையான மாற்றமாகும், மாறாக கவர்ச்சி அரசியலினால் சிங்கள – பௌத்த பேரினவாத முகவர்களுக்கு வாக்களிப்பது அரசியற் தற்கொலைக்கு வழிவகுக்கும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிலவும் தமிழ் அரசியலின் போக்குக் குறித்து சாடியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாநாட்டு மண்படத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சோ.சிந்துஜன், சி.சிவகஜன், யோ.நெவில்குமார் ஆகியோர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர்.

சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். எனினும் சிங்கள மக்களின் வாக்களிப்பு முறைக்கு நேர்மாறாக வாக்களித்ததன் மூலம் எம்மிடையே நிலவுவது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.

15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தெற்கில் ஏற்பட்டுள்ள ஊழலற்ற ஆட்சி, இளையோர்களின் அரசியற் பங்கேற்பு உள்ளிட்டவைகளின் தாக்கம் உணரப்படாமலுமில்லை. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை சமூக, பொருண்மிய, பண்பாட்டுத் தளங்களில் மக்களுக்கானதாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் எந்த முனைப்பையும் காட்டாத தமிழ்த் தேசிய முலாம் பூசிய அரசியல்வாதிகள், அரசியற் கட்சிகள் மீதான பெரும் அதிருப்தி வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகின்றது.

தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஏற்பட்ட அலையில் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கரிசனை தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் தவிர்த்துப் புறமொதுக்க முடியாதவொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம். பரிகார நீதி வேண்டி நிற்கும் தமிழ் மக்கள் நாங்கள் மாற்றம் என்ற பொது நீரோட்டத்தில் எங்கள் இருப்புக்களைத் தகர்க்கும் வகையில் தென்னிலங்கைத் தரப்புக்களை ஆதரிப்பதென்பது வரலாற்றுத் தவறு!

மாற்றம், ஊழல் இளையோர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் எனும் தென்னிலங்கையின் கவர்ச்சி அரசியலினால் வடக்கு – கிழக்கில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்புக்களை மழுங்கடிக்கப்படுவதும் அதன் மூலம் தென்னிலங்கைத் தரப்புக்களிற்கும், அரசியல் வேலைத்திட்டங்கள் ஏதுமின்றிய சுயேட்சைகளிற்கு வாக்களிப்பதும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பயணத்தை சீர்குலைக்கும் ஒன்றாகும்.

You Might Also Like

சந்திக்கும் இடம் முக்கியமல்ல ! – ஈபிடிபி சந்திப்புத் தொடர்பில் சுமந்திரன் புதுக்கதை
தீவகத்தில் ஈபிடிபியுடன் இணைவதில்லை.. தமிழரசுக்கட்சி அதிரடி தீர்மானம்
விமல் வீரவன்சவிடம் சிஐடி யினர் விசாரணை!
உள்ளூராட்சி தேர்தலை நடத்த எந்தவித சட்ட ரீதியிலான தடையும் இல்லை – ஜனாதிபதி அனுர

திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கி தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களிற்கு முற்றிலும் முரணான “இமயமலைப் பிரடகணம்” எனும் பெயரில் தமிழ் மக்களை அரசியல் சூழ்ச்சியொன்றினுள் தள்ளும் முயற்சியென்றும் இடம்பெறுகின்றதென்றும், அது சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஆக்குவதற்கு முயற்சிப்பதோடு, தமிழ் மக்களின் இறைமை அரசியலை தனியே அடையாள அரசியலினுள் சுருக்குவதற்கான கபட முயற்சியாகும்.

தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை வெகுசன கவர்ச்சிகர கண்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்து அவற்றை உட்கிடையாகப் பார்ப்பதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பொறுப்புக் கூறலும் மீள நிகழாமையும் உறுதி செய்யப்படாமல் உண்மையான மாற்றத்தை நோக்கி நாம் செல்ல முடியாது,

மாற்றம் எங்களிடமிருந்தே உருவாக வேண்டும், மாறாக தென்னிலங்கை சிங்கள – பௌத்த பேரினவாத முகவர்களை ஆதரிப்பதிலிருந்தல்ல. வடக்கு – கிழக்கு வாழ் தமிழர்கள் தமிழ்த் தேசியப் போலிகளை உதறித்தள்ளி, எங்கள் அரசியல் உரிமைகளிற்கான ஆத்மாத்தமாக போராடுபவர்களையே தெரிவு செய்ய வேண்டும். தமிழருக்கான தீர்வு தொடர்பில் எந்த முனைப்பையும் தமிழ் அரசியற் கட்சி தங்களை அகவயமான பண்புமாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article போருக்கான நேரம் உத்தரவிட்ட ஈரான் அதியுச்சத் தலைவர்
Next Article பன்னாடுகளிலும் ஒலிக்கக் கூடியவர்களைத் தேர்வு செய்வோம் – மா.சக்திவேல்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.