திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது..! விடுக்கப்பட்ட வேண்டுகோள்

Last updated: நவம்பர் 10, 2024 16:57
Share
1 Min Read
SHARE

தமிழ் மக்கள் எதிர்வரும் 14ஆம் திகதி (14.11.2024) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலே (Parliament Election) யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து கவனத்தில் எடுக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “தமிழ் மக்கள் முன் எப்போதையும் விட இம்முறை கவனமாகச் செயற்பட வேண்டியுள்ளது.

தேர்தலில் போட்டியிடுகின்றவர்களுள் தமிழ்த் தேசிய அபிலாசைகளைக் கட்சிக் கொள்கைகளாகக் கொண்ட, மறைமுகமாகவேனும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிராத ,சிங்கள அரசின் கைக்கூலிகளாக இயங்கிக் கொண்டிராத தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ள கட்சிகள் சிலவே உள்ளன.

தமிழ்த் தேசிய அரசியல்

சில கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் தேர்தல் வந்தால் மட்டுமே தமிழ்த் தேசியத்தைப்பற்றிப் பேசுவர். தேர்தல் மேடைகளில் மட்டும் சமஷ்டியே தீர்வு, தமிழ் மக்களுக்கெதிராக இன அழிப்பு நடைபெறுகிறது, சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறுவர்.

பின்னர் கதிரைகள் கிடைத்ததும் வேடங்களைக் கலைநத்து ஒற்றையாட்சிக்குட்பட்டும் 13ம் திருத்தத்துக்குள்ளும் தீர்வைத் தேடுபவர்களாகவும்,இன அழிப்பு நடைபெறவில்லை என்றும் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும் ஒற்றையாட்சிக்கான ஒத்தகருத்துச் சொல்லுக்கு புது வியாக்கியானமளித்தும் அரச ஒத்தோடிகளாக மாறுவர்.

இத்தகைய வேட்பாளர்களும் அவர்களின் கட்சிகளும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்.

You Might Also Like

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 18 ஆம் திகதி!
எம்.பியை அவமதித்த மொட்டுக்கட்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது!
அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட மதுபானசாலைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – இராசமாணிக்கம் சாணக்கியன்!
சிறிலங்கா அரசிடம் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் வைத்த கோரிக்கை

ஆகவே தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கான தெரிவை அனுபவ அறிவினூடாக செய்யும் போது போட்டியிலுள்ள மிகச் சில கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலுக்கும் அபிலாசைகளுக்கும் எப்போதும் விசுவாசமாகச் செயற்படுபவர்களாக இருப்பர்.

எனவே தமிழ்த் தேசிய அரசியற் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது தடுமாற்றமேதுமின்றி தொடர்ந்து உயரிய உறுதியுடன் நிற்கும் கட்சிகளுக்கு உங்கள் வாக்குகளை வழங்க வேண்டும்” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.     

TCSF Parlimentry election.Download

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article மதுபானசாலை விவகாரத்தை ஆதார பூர்வமாக நிரூபியுங்கள்..! சவால் விடுக்கும் சிறீதரன்
Next Article அமைதியான முறையில் தேர்தல் பிரசாரம்: அவதானிக்கும் ஆசிய நாடுகள்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.