திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
சூழலியல்

வேகமெடுக்கும் காடழிப்பு; 2022ல் இவ்வளவா?

Last updated: அக்டோபர் 10, 2024 10:47
Share
2 Min Read
SHARE

காடுகளைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் உலக நாடுகள் பல உறுதிமொழிகளை எடுத்துக்கொண்ட போதிலும் 2022ஆம் ஆண்டில் காடழிப்பு தீவிரமடைந்துள்ளதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.  இது 2030ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய வருடாந்திர இலக்குகளில் 21% பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

2030ஆம் ஆண்டிற்குள்  காடழிப்பை ஒழித்து 350 மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை மீட்டெடுப்பதற்காக நாடுகள், நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உறுதிமொழிகளின் தற்போதைய நிலையை மதிப்பிடும் ஒரு புதிய ஆய்வை பல்வேறு குடிமைச் சமூகங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளின் கூட்டணி மேற்கொண்து. 2022 ஆம் ஆண்டில், காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுப்பதில் உலகளாவிய முன்னேற்றம் மிகவும் மெதுவாக நகர்ந்ததாகவும், சில சந்தர்ப்பங்களில் மோசமடைந்த தாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

குறிப்பாக, 2022ஆம் ஆண்டில் உலகளவில் ஏறத்தாழ 66 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டதாகவும் இது 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 4 விழுக்காடு அதிகம் எனவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. கால்நடை வளர்ப்பு, சோயா, பாமாயில் உற்பத்தி மற்றும் குறு விவசாயம் உள்ளிட்ட செயல்பாடுகள் காடு இழப்பிற்கு முன்னணி காரணமாக இருக்கின்ற நிலையில், சாலை விரிவாக்கம், தீ விபத்து மற்றும் வணிக ரீதியான மரம் வெட்டுதல் ஆகியவையும் காடழிப்பில் பங்கு வகிப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2022ஆம் ஆண்டில் காடழிப்பினால் மட்டும் வெளியான பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வு 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 விழுக்காடு அதிகம்  எனவும் 1970 முதல் 2018 வரையிலான காலத்தில் உயிர் வாழவும் இனப்பெருக்கத்திற்கும் காடுகளை நம்பியிருந்த உயிரினங்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2021ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் பன்னாட்டு காலநிலை உச்சி மாநாடு நடைபெற்றது. உலகின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயராமல் தடுப்பதற்காக காடுகள் அழிப்பை 2030ஆம் ஆண்டிற்குள் நிறுத்துவதற்கான உடன்பாடு ஒன்றில் 141 நாடுகள் இணைந்து கையெழுத்திட்டன. இந்த உடன்பாட்டை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலக நாடுகள் காடழிப்பைத் தடுக்கும் செயல்பாடுகளில் முன்னேற்றம் காட்டாதது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

விரிவான அறிக்கைக்கு: https://forestdeclaration.org/resources/forest-declaration-assessment-2023/

You Might Also Like

குறையும் பனி வரம்புகள்; எச்சரிக்கும் நாசா!
ஆபிரிக்கப் நத்தைகளால் பேராபத்து விளையும் – பொ.ஐங்கரநேசன்
அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலின் தாக்கம்; திணறும் வளரும் நாடுகள்
ரோமானியர்கள் ஏன் பிரிட்டனை விட்டு வெளியேறினார்கள்?

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலின் தாக்கம்; திணறும் வளரும் நாடுகள்
Next Article அழிவின் விளிம்பில் AMOC
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.