திங்கட்கிழமை, 7 ஜூலை 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • செம்மணி
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானியை மீளப்பெற்றது சிறிலங்கா அரசு !

Last updated: ஜூன் 29, 2025 06:44
Share
SHARE

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட தமிழர் தாயகத்திலுள்ள ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தொரு ஏக்கர் (5941 ஏக்கர்) காணிகளை அரசுடைமையாக்கி அபகரிக்கும் நோக்கில் சிறிலங்கா அரசு முன்று மாதங்களுக்கு முன்னர் விடுத்த வர்த்தமானி அறிவித்தலினை கடைசி நேரத்தில் மீளப்பெற்றிருக்கின்றது சிறிலங்கா அரசு.

முன்னைய வர்த்தமானி அறிவித்தலை விலக்கும் புதிய வர்த்தமானி பிரகடனத்தில் கூட சிறிலங்கா அரசு பொடி வைத்துத்தான் அதனைச் செய்திருக்கின்றது.

“முன்னைய வர்த்தமானி அறிவித்தல் அரசின் கொள்கை முடிவுக்கு அமைய இத்தால் இரத்துச் செய்யப்படுகின்றது.” என்று புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டள்ள அரசு “மேற்படி காணிகள் உள்ள பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில்க் கொண்டும் இந்த காணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உரிமை கோருபவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்றும் தெரிவித்துள்ளது.

அதன் பொருள், இந்த விடயத்தை இப்போதைக்கு இரத்துச் செய்கின்றோம், தேவைப்பட்டால் போதிய வாய்ப்பை வழங்கி காணி அபகரிப்பு நடவடிக்கையை பிறிதொரு புதிய அறிவித்ததல் மூலம் முன்னெடுக்க நடவடிக்கை எடுப்போம் என்பது தான் என சட்ட வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மூல – முதல் வர்த்தமானி அறித்தல் மார்ச் 28, 2025 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதன்படி மூன்று மாதகாலத்தில், யூன் மாதம் 28ஆம் திகதி மேற்படி காணிகளில் சான்றாதாரங்கள் மூலம் உரிமைகள் நிலை நாட்டப்படாதவற்றைச் சுவீகரிக்கும் அதிகாரம் அரசுக்கு வந்துவிடும் என்ற நிலைமையில் நேற்றுக் கடைசி நேரத்தில் அந்த வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருந்தது.

எனினும் யூன் 27, 2025 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில், இந்தக் காணிகளுக்கு உரிமை கோரக்கூடியவர்களுக்கு போதிய வாய்ப்பை வழங்கி அதன் பின்னர் காணி அரசுடமையாக்கி அபகரிக்கும் முயற்சி எச்சமயத்திலும் முன்னெடுக்கப்படலாம் என்ற விவரம் உள்ளடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

வேலைவாய்ப்பு வழங்குவதாக அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி மோசடி!
பங்களாதேஷ் பெட்மிண்டன் தொடரில் சிறி லங்கா வீரருக்கு தங்கப் பதக்கம்!
செம்மணி மனிதப்புதைகுழி முதற்கட்ட அகழ்வுப் பணி நிறைவிற்கு வந்தது !
செம்மணியில் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article செம்மணி மனிதப் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம் – சீமான்
Next Article தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த ஐ.நா.வுக்கு அழைப்பு !
யாழ்.செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
செய்திகள்
விரைவில் சிறி லங்காக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள்!
செய்திகள்
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும் – நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு!
செய்திகள்
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்-அமைச்சர் விஜித ஹேரத்
அரசியற் செய்திகள்
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் கனடாவில் போராட்டம்
செய்திகள்
தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அணி திரள்விற்கு அழைப்பு !
செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.