வியாழக்கிழமை, 26 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

தமிழரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஐ.நா. உறுதி

Last updated: ஜூன் 26, 2025 08:53
Share
SHARE

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உறுதியாக இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்  தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று(25.06.2025) வருகை தந்த அவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதன்போது, மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக வோல்கர் டர்க் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறியுள்ளார்.

மேலும், மனித புதைகுழிகள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மிக மோசமாக அரசாங்கம் நடக்காமல் இருப்பதற்கு ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு வலியுறுத்தியதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

தமிழின துரோகிகளுடன் கை கோர்ப்பது மிக கேவலம் – முகத்திரையை கிழிக்கும் கருணாநிதி
சிஐடி யில் இன்று முன்னிலையாகும் யோஷித்த ராஜபக்ஷ!
அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல புதுமுகங்கள் மாத்திரம் போதாது – இராதாகிருஸ்ணன் எம்.பி!
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திற்கு உடனடி தீர்வு வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து செம்மணி புதைகுழி உள்ளிட்ட நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதற்கு நாம் நன்றி கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article மறக்க முடியாத கடந்தகாலம் தெளிவாகும் தருணம் – ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் உருக்கமாகப் பதிவு
Next Article செம்மணி போராட்டத்தில் கடற்றொழில் அமைச்சரை தடுத்தது தவறு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
செம்மணி போராட்டத்தில் கடற்றொழில் அமைச்சரை தடுத்தது தவறு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அரசியற் செய்திகள்
மறக்க முடியாத கடந்தகாலம் தெளிவாகும் தருணம் – ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் உருக்கமாகப் பதிவு
அரசியற் செய்திகள்
உடைத்து சேதப்படுத்தப்பட்ட தந்தை செல்வாவின் சிலை
செய்திகள்
ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு பின் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
செய்திகள்
அணையா தீபத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் வோல்கர் டர்க்
செய்திகள்
ஈழத்தமிழரைக் கைவிட்டது போல் மலையக மக்களைக் கைவிடாதீர்கள் – மனோ கணேசன்
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.