வியாழக்கிழமை, 26 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

ஈழத்தமிழரைக் கைவிட்டது போல் மலையக மக்களைக் கைவிடாதீர்கள் – மனோ கணேசன்

Last updated: ஜூன் 25, 2025 13:38
Share
SHARE

ஐக்கிய நாடுகள் சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், சிறி லங்காவில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

யுத்த காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை வடக்கிலிருந்து முன்னறிவித்தலின்றி வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க ஏதுவாக அமைந்து விட்டது என அவர் குற்றம் சுமத்தினார். 

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த போதும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடைபெறவில்லை. 

அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை எனவும், இனப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறி லங்காக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை சந்தித்த போது நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இது தொடர்பில் கலந்துரையாடினார். 

மேலும் ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐ.நா சபை தங்களைக் கைவிட்டு விட்டதாக நினைப்பதாக சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், ஈழத்தமிழ் மக்களைக் கைவிட்டதை போன்று, மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தார்.

You Might Also Like

தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு
இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு!
வன்னி பாடசாலைகளிலுள்ள வளக்குறைகளைச் சுட்டிக்காட்டிய ரவிகரன் எம்.பி
சிறிலங்காவின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது !

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article செம்மணியில் பதற்றம்! விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம்
Next Article அணையா தீபத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் வோல்கர் டர்க்
ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு பின் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
செய்திகள்
அணையா தீபத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் வோல்கர் டர்க்
செய்திகள்
செம்மணியில் பதற்றம்! விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் கண்டனம் வெளியிட்டுள்ள யாழ்.சர்வமதப் பேரவை
செய்திகள்
பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான்! பெசேஷ்கியான் விடுத்துள்ள எச்சரிக்கை
பன்னாட்டுச் செய்திகள்
தமிழின படுகொலை தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.