காணி உரிமைக்கான கோரிக்கை 18 வருடகால கோரிக்கையாக இருந்து வருகின்றது. யூன் 21 காணி தினம் ஒரு கொண்டாட்டம் அல்ல அது நமது உரிமைக்காகவும் நமது நிலங்களுக்காகவும் நமது வரலாற்றுக்காகவும் நாம் எழுப்பும் குரல். என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அவர்கள் 20.06.2025 அன்று வெளியிட்ட ஊடக வெளியீட்டில் மேலும் தெரிவித்தாவது,
மலையக மக்களின் அடிப்படை உரிமைகளில் காணி உரிமையும் முக்கியமான தொன்றாகும் நீண்ட காலமாகவே நிலத்திற்கான உரிமையற்ற ஒரு சமூகமாக இருப்பதோடு எமது தலைமுறைக்கே நில உரிமை என்பது மறுக்கப்பட்ட இருளாகவே காணப்படுகின்றது. அதற்கான வெளிச்சம் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மனிதர்கள் காலடி படாத காடுகளை அழித்து அதில் பெருந்தோட்டங்களை உருவாக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உழைப்பை வழங்கிய எம் மக்களின் விழித்தோன்றல்களுக்கு அடிப்படையான காணி உரிமை என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. உண்மையிலேயே இது நீதியானதா ஏன?; இதற்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கங்களும் பெருந்தோட்ட கம்பெனிகளும் முன்வருவதில்லை என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
மக்கள் அவர்களுக்கான காணி உரிமையை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு போராட்டங்களை அன்றாட மேற்கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனாலும் இன்று வரை தீர்வு காண் முடியாத தன்மையிலே காணப்படுகின்றது. காணி உரிமைக்கான முதலாவது போராட்டம் 1946 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் மலையக மக்களின் முதலாவது காணிக்கான போராட்டம கேகாலையின் உருலவள்ளி பெருந்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அப்பெருந்தோட்டத்தில் அம்மக்களின் 400 ஏக்கர் குடியிருப்பு நிலம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமது காணிகளைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக அது அமைந்திருந்தது. இலங்கைப் பெருந்தோட்டங்களில் உள்ள இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் காணி உரிமைகளைக் கோரி இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்க சம்மேளத்தினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் கேகாலை மற்றும் களனிப் பள்ளத்தாக்கு பிரதேசங்களைச் சேர்ந்த 125,000 த்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றிருந்தனர்.
1972 ஆம் ஆண்டின் காணிச் சீர்திருத்தச் சட்டம் குடியேற்றங்கள் உருவாகவும் காணிக் கையகப்படுத்தல்கள் நிகழவும் வழிவகுத்தது. தொடர்ச்சியான காணிக் கையகப்படுத்தல்கள் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. டெவோன் தோட்டத்தின் 7,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக மே 11, 1977 அன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சிவானு லட்சுமணன் என்ற இளம் தோட்டத்தொழிலாளி பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் விளைவாக பெருந்தோட்ட நிலங்களை பறிமுதல் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது.
அதே போன்று, 2000 ஆம் ஆண்டில், மேல் கொத்மலை நீர் மின்சார திட்டத்துக்காக அப்பிரதேச மக்களை வெளியேற்றும் முன்னெடுப்பு தொடர்ச்சியான மக்கள் போராட்டம் காரணமாக கைவிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தின் ஹபுத்தளை பிரதேசத்தில் மேரியாவத்த பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு பேரழிவின் பின்னர், மலைநாட்டில் வாழும் மக்களுக்கு குடியிருப்புக்கு பொருத்தமான இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கோரிக்கை நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டது.
காணி உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் எமது முன்னோர்கள் மேற்கொண்ட தியாகங்கள் அளப்பெரியன. மலையக மக்களின் காணி உரிமைக்கான அங்கீகாரத்தை பாதுகாக்க பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், அவர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதுடன் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும். மீறல்கள் தொடர்ந்த வண்;மேயுள்ளன. எனவே, இந்தக் கோரிக்கை நாட்டின் தேசிய உரையாடலில் உள்ளடக்கப்படும் ஒரு தேவை தற்போது எழுந்துள்ளது.
மேலும் மலையக மக்களுக்கு பெருந்தோட்ட காணிகளை வழங்குவதற்கு மாத்திரம் பெருந்தோட்ட கம்பெனிகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையே காணப்படுகின்ற குத்தகை ஒப்பந்தம் காரணமாக காணி உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு பெருந்தோட்ட கம்பெனிகளுடன் எவ்வித தொடர்பும் மற்ற கானி சீர்திருத்த ஆணைக்குழு இ(துநுனுடீ)இ(ளுடுளுPஊ)இ(வுசுஐ) ஆகிய அரச நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தோட்ட காணிகளை அவற்றில் வாழும் மலையக மக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக அனுமதிப்பத்திரம் அழைப்பு பத்திரம், அளிப்பு பத்திரம்,அறுதியீட்டு உறுதி ஊடாக வழங்குவதற்கு இதுவரையில் எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.
எமது நாட்டில் பிரஜைகளுக்காக குடியேற்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டு புதிய கிராமங்கள் அமைக்கப்படும் போது ஏனைய எல்லா காரணிகளுக்கு அப்பால் பிரஜைகளின் குடும்ப பாதுகாப்பு நலன் இ பொருளாதார சுபிட்சம் என்பவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனினும் மலையக மக்களுக்கு குடியிருப்புக்காக காணி வழங்கப்படும் பொழுது மாத்திரம் நம் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட தேயிலைச் செடிகளுக்கும் ரப்பர் மரங்களுக்கும் அம்மக்களை விட அதிக மதிப்பு வழங்கப்பட்டு தேயிலைச் செடிகளையும் ரப்பர் மரங்களையும் காப்பாற்றுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து லயங்களிலே வாழ்வது உறுதி செய்யப்படுகின்றது.
இலங்கையில் வாழும் எல்லாப் பிரஜைகளுக்கும் அரசு காணி வழங்கவில்லை என்பது உண்மையென்ற போதும் தனது சொந்த வருமானத்தில் கொள்வனவு செய்ய முடியாத ஏக பெரும்பான்மை பிரதிகளுக்கு காணி வழங்கி அவர்களின் நில உரிமையும் இருப்பையும் அரசு உறுதி செய்துள்ளது. தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது எனினும் வரலாறு நெடுகிழும் ஏறத்தாழ மலையக மக்கள் அனைவருக்கும் காணி உரிமை மறுக்கப்பட்டமையும் அதன் காரணமாக மிக அடிப்படை உரிமையான முகவரியை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் ‘‘ தோட்ட சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் வழங்கிய முகவரியை மலையக மக்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர். ’’ என்பதே நிதர்சனமான உண்மை.
எனவே பல்கலைக்கழக மாணவர்கள் ஆகிய எங்களுக்கும் எங்களுடைய சமுதாயத்திற்கான விடிவை பெற்றுக் கொள்வதற்கான ஒரு கடமைப்பாடு உள்ளது. ஆகவே எங்கள் தலைமுறையின் அடிப்படை நிலப் பிரச்சனைகளை காண தீர்வுகளை எட்டப்பட வேண்டிய சூழ்நிலை இன்று காணப்படுகின்றது.
மலையக சமூகங்களின் காணி உரிமைகளை உறுதி செய்வதற்காகவும் காணியற்றவர்களுக்காக காணிகளைக் கோருவதற்காக ஒத்த சிந்தனையுள்ளவர்களை ஒன்று திரட்டவும் ஒரு தேசிய தினம் பிரகடணப்படுத்தப்பட வேண்டும். என மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் (ஆPPடுசு) நீண்ட காலமாக கோரி வருகின்றது. காணிப் பிரச்சினைகளை தீர்க்க, பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் கடந்த பதினெட்டு வருட காலமாக (ஆPPடுசு) பணிபுரிந்து வருகின்றது. உருலவள்ளி ஆர்ப்பாட்டத்தின் நினைவு தினமான ஜுன் 21 ஆம் திகதியை “காணித் தினமாக” பிரகடணம் செய்ய வேண்டும் என இவ்வியக்கம் கோரிக்கை விடுக்கின்றது. இதன் அடிப்படையில் நான்காவது காணி தினத்தினை எதிர்வரும் 21ம் திகதி சனிக்கிழமை அட்டன் நகரில் முன்னெடுப்பதற்கு ‘நிலமற்றோர்க்கு நிலம்’ எனம் தொணிப்பொருளில் “மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம்” ஏற்பாடுகளை செய்து வருவதாக அதன் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.
மலையக மக்களின் காணி பிரச்சினை இன்னும் ஒரு கொள்கை ரீதியில் தேசிய வேலைத் திட்டத்துடன் முன்னெடுக்கப்படாத நிலையில,; தற்போது அதற்கான அழுத்தங்கள் பாரியளவில் எழுந்திருப்பது முக்கியமான விடமாகும். அந்த வகையில் மலையக மக்களுடைய காணிக்கான போராட்டமும் அதன் வரலாறும் மிக பழமை வாய்ந்ததாக உள்ளது. மலையக மக்களுடைய காணிக்கான போராட்டம் இந்த நாடு சுதந்திரம் பெருவதற்கு முன்பதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது வரலாற்று மற்றும் சரித்திரமிக்க போராட்டம் என்பது தற்போது வெளிக் கொண்டு வரப்பட்டு அதனை மையமாக கொண்டு 2022 ம் ஆண்டு மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் ஒரு காணி தினத்தை பிரகடனப்படுத்தியது. அதனை தொடர்ந்து வந்த வருடங்களில் இது மிகவும் பிரபல்யமான முறையில் முன்னெடுக்கப்பட்டு 2025 ம் வருடத்தின் காணி தினத்தினை வரும் 21ம் திகதி சனிக்கிழமை அட்டன் நகரில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் செய்து வருகின்ற நிலையில் நீண்ட காலமாக மக்களின் தேவையாகவும் மக்களின் நிலம் சார்ந்த இருப்பியலை தக்க வைத்து கொள்வதற்கு இவ்விடயத்தில் முன்னேடுப்புக்களை ‘யாழ்பாண பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியம் ஆதரவு தெரிவிக்கும் அமைதி வழி போராட்டதிற்கான ஒத்துழைப்புகள் வழங்குவது இனி ஒரு போதும் பின்னிப்பதிப்;பதில்லை.’ என்று ஊடக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
