திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

மனிதப் புதைகுழி தொடர்பில் சிறிலங்காவிற்கு அழுத்தம் – பிரித்தானிய MP வலியுறுத்து!

Last updated: ஜூன் 20, 2025 06:56
Share
SHARE

யாழ்ப்பாணம், செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் தற்போது வரையில் மூன்று கைக்குழந்தைகள் உட்பட பல எலும்புக் கூடுகள் தொடர்ந்து, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் லாமிக்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு 2025 ஜூன் 17 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் மனிதப் புதைகுழு கண்டுபிடிப்பு “இத்தகைய பயங்கரக் குற்றங்கள் இன்னும் புதிதாகவே உள்ளன என்பதை நினைவூட்டும் அதிர்ச்சிகரமான சம்பவமாகும்” எனக் கூறிய அவர், இந்த இடத்தில் நடைபெறும் விசாரணைக்கு சுதந்திரமான மற்றும் நம்பகமான பன்னாட்டு ஆதரவை பிரித்தானிய அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

2024ஆம் ஆண்டில் வெளியான ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையத்தின் அறிக்கையை மேற்கோளாகக் குறிப்பிட்ட அவர், இலங்கை சர்வதேசத் தரநிலைகளில் மனிதப் புதைகுழிகளைத் தோண்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் வலிமைபடுத்தப்பட வேண்டிய தேவை இருப்பதையும், சிறிலங்கா அரசு பன்னாட்டு உதவியை நாட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

“உண்மை, அமைதி, நீதியுடனான பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் பிரிட்டன் அரசின் நிலைப்பாட்டின் அடிப்படையில், இதனைச் சமாளிக்க இப்போது உள்ள மற்றும் திட்டமிடப்பட்ட ஆதரவுகள் குறித்து விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் எழுதியுள்ளார்.

ஸ்டிராட்ஃபோர்ட் மற்றும் போவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் இருக்கும் உமா குமரன், இலங்கையுடன் நடைபெறும் எல்லா இருதரப்பு தொடர்புகளிலும் இந்த செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென வெளிவிவகார அமைச்சை கேட்டுக்கொண்டுள்ளார்.

மனித உரிமைகளுக்கும் பொறுப்புக்கும் ஆதரவு வழங்கும் பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி அரசுகளின் பாரம்பரியத்தை அவர் நினைவூட்டியதுடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தடைகள் மூலமாக வெளிவிவகார செயலாளர் லாமி அந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

You Might Also Like

இளங்குமரன் எம்பிக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
யாழில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம் – விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் மக்கள் கேள்வி!
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கைது!
ரணில் மீது குற்றச்சாட்டு – டலஸ் அநுரவுக்கு கடிதம்

“தமிழர்களுக்கான நீதி இல்லாத நிலை எனக்கு எவ்வளவு ஆழமாகத் தெரியும் என்றும், உணர்கின்றேன் என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்” எனக் கூறிய அவர், “போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் கேட்டபடி பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) முன்னிலைப்படுத்த வேண்டுமென நம்புகிறேன்” என்றார்.

“இந்தக் குற்றங்களின் நிழலில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறைக்கும், இன்னும் பதில்கள் தேடித் தவிக்கும் குடும்பங்களுக்கும், உயிரிழப்புக்களிலிருந்து உயிர்தப்பியுள்ளவர்களுக்கும் நாம் இந்தப் பொறுப்பை எற்றுநிற்கின்றோம்” என அவர் தனது கடிதத்தை முடித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களிலும் அவர் தனது ஆழ்ந்த பதற்றத்தை வெளிப்படுத்தினார்:
“செம்மணியில் மூன்று கைக்குழந்தைகள் உட்பட்ட மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டது — இது ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அரசு ஆதரவு குற்றங்களை நினைவூட்டும் கொடூரமான நிகழ்வாகும்” என்றார்.

“இந்த பயங்கரமான குற்றத்தை முழுமையாக விசாரணை செய்ய பன்னாட்டு ஒத்துழைப்புடன் பிரிட்டன் அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என ஜடேவிட் லாமி அவர்களுக்கு நான் எழுதியுள்ளேன்” என்றும் அவர் கூறினார்.

The recent discovery of a mass grave in Chemmani – including the bodies of three babies – is a devastating reminder of the state sponsored atrocities inflicted on Tamils in Sri Lanka.

I’ve written to @DavidLammy urging the UK Government to support alongside international… pic.twitter.com/iPhQod4s7R

— Uma Kumaran MP (@Uma_Kumaran) June 18, 2025

செம்மணி பகுதிக்கு 1990களின் இறுதியில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னணியில் ஒரு முக்கியமான இடமாக இருக்கிறது. 1998ஆம் ஆண்டு, ஒரு சிறிலங்காவின் இராணுவ வீரர் செம்மணியையும் சுற்றியுள்ள இடங்களையும் குற்றச்சாட்டுடன் கூடிய மனிதக் புதைகழிகளாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இரண்டிற்கும் மேற்பட்ட தசாப்தங்கள் கடந்தும், பெரும்பாலான மனிதப் புதைகுழிகள் இன்னும் அகழப்படவில்லை, மற்றும் யாரும் இதுவரை குற்றவாளியாக நிரூபிக்கப்படவில்லை.

இந்தக் மனிதப் புதைகுழியில் குழந்தைகளுடையது உட்பட மனித எலும்புக் கூடுகள் அண்மையில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பல தமிழர்கள் இது தொடர்பாக முழுமையான பன்னாட்டு கண்காணிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article தமிழினப் படுகொலை தூபி சேதம் ! – கனேடிய அரசு அதிரடிக் கைது
Next Article யாழில் நாளை மாபெரும் போராட்டம்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.