திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

தமிழினப் படுகொலை தூபி சேதம் ! – கனேடிய அரசு அதிரடிக் கைது

Last updated: ஜூன் 19, 2025 05:50
Share
SHARE

கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த மே மாதம் திறந்து வைக்கப்பட்ட தமிழினப் படுகொலை நினைவுத் தூபி இரண்டாவது தடவையாக கீழ்த்தரமான முறையில் சேதப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் கனடியத் தமிழர் தேசியப் அவையின் கண்டனத்தைத் தொடர்ந்து கிளர்ந்தது. மேலும் கனேடிய பீல் பிராந்திய காவல்துறை சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

15, யூன் 2025 ஆம் தேதி காலை, நினைவுச்சின்னத்தின் முக்கிய பகுதிகளை ஒளிரச் செய்யும் பல ஒளி வசதிகள் அழிக்கப்பட்டிருந்தன. இது கடந்த சில வாரங்களில் நடந்த இரண்டாவது சம்பவமாகும்; இதற்கு முன் 27, மே 2025 ஆம் தேதி இதேபோன்ற ஒரு தாக்குதல் இடம்பெற்றது. கண்காணிப்பு ஒளிப்படக் கருவிக் காட்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின், பீல் பிராந்திய காவல் துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.

இந்த தாக்குதல்களை “தமிழீழ அழிப்பு நினைவுச்சின்னத்தை குறிவைக்கும் திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள்” எனக் கண்டித்தது கனடியத் தமிழர் தேசிய அவை (Nஊஊவு). மேலும், இது தமிழீழ அழிப்பு மறுப்பு மற்றும் வரலாற்றை மீளுருவாக்கும் ஒரு பரந்ததொகை செயல்முறையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது என அந்த அமைப்பு எச்சரித்தது.

“இத்தகைய அக்கணிப்பு மற்றும் வெறுப்பும் செயல்கள், தமிழ் மக்களின் வேதனையூட்டும் வரலாறுகளை அழிக்க முயல்கின்றன் மேலும், அவர்களது மனவெதிப்பை மேலும் தீவிரப்படுத்துகின்றன,” என அந்த க.த.தே.அ தனது அறிக்கையில் தெரிவித்தது.

தமிழீழ இனப்படுகொலையின் நினைவுகளை இழிவுபடுத்தும் இந்தச் செயற்பாடுகள், “உண்மை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மதிப்பு போன்ற கனேடிய மதிப்பீடுகளுக்கும் எதிராகும்.” என்றும் கனேடியத் தமிழர் தேசிய அவை தனது அறிக்கையில் குறிப்பிட்டது. இந்தச் சம்பவத்தை முழுமையாக விசாரிக்க கனேடிய பீல் பிராந்திய காவல் துறையும், பிராம்டன் மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

அத்துடன், நினைவுச் சின்னத்தின் அடிப்படை அமைப்பு சேதமில்லாமல் இருக்கும் என்றும், இது தமிழினப்படுகொலை நினைவுகள் மற்றும் இனப்படுகொலைக் கல்விக்கான முதன்மை இடமாகத் தொடர்ந்து விளங்கும் என்றும், “இந்த நினைவுச் சின்னம், எங்களின் வேதனையான அனுபவங்களை பகிர்வதற்கும், தமிழீழ இனஅழிப்புப் பற்றிய உண்மைகளை கனேடியர்களிடம் எடுத்துரைப்பதற்கான வாய்ப்பாகவும் உள்ளது என ககேடியத் தமிழர் தேசிய அவை தெரிவித்தது.

You Might Also Like

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசுபொருளான தையிட்டி விகாரை விவகாரம்!
பதவி விலகப் போகிறாரா அர்ச்சுனா?
தமிழ்த் தேசியப் போலிகளையும் போதை வியாபாரிகளையும் நிராகரிப்போம் – ஐங்கரநேசன்
சட்ட விரோத விகாரைக் காணிக்கு நட்ட ஈடு வழங்கி பௌத்த மயமாக்கத்திற்கு சட்ட அங்கீகாரம்

மேலும் சிறிலங்கா அரசு கடந்த பல ஆண்டுகளாக திட்டமிட்ட, கடுமையான, வெளிப்படையான மற்றும் மறைமுகமான வெளிநாட்டுத் தலையீட்டில் ஈடுபட்டு, கனடாவில் தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்கான பயனத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு முயன்று வருகின்றது. கனேடியத் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க எதுவும் சந்தேகத்திற்கிடிமான செயல்கள் தென்பட்டால் கனேடிய உள்;ர் காவல்த் துறைக்கு தகவல் அளிக்க, மேலும் “தமிழினவழிப்பு மறுப்பிற்கு” எதிராக உள்;ர் மற்றும் உலகளாவிய போராட்ட முயற்சிகளில் தொடந்து ஈடுபடுமாறு கனேடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழீழ அழிப்பு நினைவுச் சின்னம், தமிழர் சமுதாயத்தின் நீண்ட கால நீதிக்கான வழிவந்த போராட்டத்தின் ஒரு முக்கியமான அடையாளத்தையும், பன்னாட்டு அங்கீகாரம் மற்றும் பொறுப்புக் கேட்கும் முயற்சிகளுக்கான முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article அடுத்த வாரம் முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவை
Next Article மனிதப் புதைகுழி தொடர்பில் சிறிலங்காவிற்கு அழுத்தம் – பிரித்தானிய MP வலியுறுத்து!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.