திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

அடுத்த வாரம் முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவை

Last updated: ஜூன் 18, 2025 17:20
Share
SHARE

இலங்கையில் எலான் மஸ்க்கிற்கு(Elon Musk) சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க் (Starlink) சேவையை அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) அறிவித்துள்ளது.

TRCSL பொது இயக்குநராக பணியாற்றும் ஓய்வுபெற்ற விமான படை அதிகாரி பந்துல ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், முதற்கட்டமாக 12 பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சாதனங்கள் இவ்வாரமே விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை மொத்தமாக 112 ஸ்டார்லிங்க் சாதனங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த சேவை அறிமுகப்படுத்தும் தொடக்கத்தின்போது, TRCSL மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து சேவையின் தரத்தையும் தேசிய பாதுகாப்பு தொடர்பான அம்சங்களையும் ஒரு வாரத்துக்குப் பரிசோதனை செய்யவுள்ளனர். இந்த பரிசோதனையின் பின், ஸ்டார்லிங் தனது வணிகச் சேவைகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கும்.

ஸ்டார்லிங்க் நிறுவனம், 2024 ஒகஸ்ட் மாதம், இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தம் செய்து செயற்கைக்கோள் இணைய சேவையை அனுமதித்த பின்னர், ஒழுங்குமுறை அனுமதியைப் பெற்றது.

இந்நிறுவனத்துக்கு எதிராக அதிகாரபூர்வ அரச மட்டங்களில் விமர்சனமும் எழுந்துள்ளது.

You Might Also Like

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதிக்கவுள்ள நுகர்வோர் சங்கம்
எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
சஜித் அணியிலிருந்து சம்பிக்க விலகல்

கடந்த மே மாதத்தில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஸ்டார்லிங்க் உடன் மேற்கொண்ட ஆரம்ப ஒப்பந்தத்தின்போது தேசிய பாதுகாப்பு நெருக்கடிகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்திற்கு பயனாளர்களின் தகவல்களைப் பெற முடியாத நிலை, உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் கவலைக்குரியதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்டார்லிங்க், SpaceX நிறுவனத்தால் இயக்கப்படுகிறது மற்றும் நிலத்திலிருந்து குறைந்த தூரத்தில் உள்ள(Low Earth Orbit) ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் மூலம் உயர் வேக இணைய சேவையை வழங்குகிறது.

இது, இணைய வசதியற்ற குறுகிய மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் இந்த சேவை செயலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article வல்லரசையே கதிகலங்க வைக்கும் போர் யுக்தி! உலகின் முதலாவது நாடாக ஈரான் படைத்துள்ள சாதனை
Next Article தமிழினப் படுகொலை தூபி சேதம் ! – கனேடிய அரசு அதிரடிக் கைது
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.