திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

தீவிரமடையும் இஸ்ரேல்- ஈரான் தாக்குதல்! ஈரான் அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Last updated: ஜூன் 15, 2025 15:53
Share
SHARE

ஈரான் தலைநகர் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் தஞ்சமடைய, ஈரான் அரசு தனது அடித்தள மெட்ரோ நிலையங்கள், மசூதிகள் மற்றும் பள்ளிகளை 24 மணி நேரமும் (24/7) திறந்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அரசாங்க பேச்சாளர் பத்மே மொஹஜெரானி தனது டெலிகிராம் பதிவில் கூறியதாவது,” இன்று இரவு முதல், மெட்ரோ நிலையங்களும் மசூதிகளும் பாதுகாப்பான இடங்களாக 24 மணி நேரமும் திறந்திருக்கும். மக்கள் பள்ளிகளையும் பாதுகாப்பான இடங்களாக பயன்படுத்தலாம்.

தெஹ்ரானின் நகர மன்றத் தலைவர் மெஹ்தி சாம்ரான் கூறுகையில், “தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் முழுமையாக தயார் செய்யப்பட்ட பாதுகாப்பு முகாம்கள் இல்லாத நிலைதான் உள்ளது.

எனவே, வாகன நிறுத்துமிடங்களும், உயரமான கட்டடங்களும் அவசர நிலைகளுக்குப் பயன்படுத்தத்தக்க இடங்களாக மாற்றப்படலாம்.

இஸ்ரேலின் இராணுவம் (IDF) வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரானிலிருந்து இஸ்ரேலுக்கு நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் (missiles) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மேலும் அவை தடுக்கும் நடவடிக்கையாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது,

You Might Also Like

காசாவில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் – உரிமை கோரிய இசுரேல்
ஹெய்ட்டியில் மீண்டும் துப்பாக்கி தாக்குதல்கள் : உதவிக்கோரிய பொதுமக்கள்
ஈரான் – இஸ்ரேல் மோதல்: பரஸ்பர ஏவுகணைத் தாக்குதல்களால் பெரும் பதற்றம்
தப்பியோடிய சிரிய அதிபர் ரஷ்யாவில்…

“ஹோம் ஃபிரண்ட் கமாண்டிலிருந்து எச்சரிக்கை வெளியிடப்பட்டதும், மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக சென்று அங்கேயே தங்கியிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியே வரக் கூடாது.” “பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியே வருவதற்கு, தெளிவான உத்தரவு வந்த பிறகு மட்டுமே அனுமதி உள்ளது,” என வலியுறுத்தியுள்ளது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி
Next Article செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை விரட்டியடியுங்கள்..! வலியுறுத்தும் சபாநாயகர்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.