நீண்டகாலமாக இலங்கை இராணுவத்தின் தண்டனை விலக்கின் சின்னமாக கருதப்பட்ட செம்மணி சித்துபாதி புதைகுழியின் மர்மங்கள் தற்போது வெளியாகியுள்ளமை சர்வதேசத்தின் பார்வையை இலங்கை மீது திருப்பியுள்ளது.
1998 ஆம் ஆண்டில், ஒரு இலங்கை இராணுவ வீரர் அந்தப் பகுதியில் வெகுஜன புதைகுழிகள் இருப்பதாக சாட்சியமளித்த கருத்து இன்று உண்மைகளாக எலும்புக்கூடுகள் வடிவில் வெளிவருகின்றது.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் எச்சங்கள், மனித புதைகுழிகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான போருக்கு முந்தைய இலங்கை அரசின் மோசமான பதிவை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன என்றே கூற வேண்டும்.
இந்தநிலையில் இந்த மனிதப்புதைக்குழி தொடர்பில் உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் ஊடகங்கள் செம்மணி புதைக்குழியை நோக்கி புறப்பட்டது.
இதன்போது, சமூகசெயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் செம்மணியில் மனிதபுதைக்குழி தொடர்பான அனுபவங்களை ஊடகங்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.
அத்துடன் இந்த மனிதப்புதைக்குழி தொடர்பில் பாரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.
