திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

தமிழரசிடம் இருந்து விக்கியை பாதுகாக்க இனி யாரும் இல்லை: இப்படிக் கூறுகின்றார் சித்தார்த்தன்

Last updated: ஜூன் 13, 2025 06:16
Share
SHARE

வட மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி தாமே அவரை பாதுகாத்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எதிர்வரும் காலத்தில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நல்லூர் பிரதேச சபையில் இணைந்து ஆட்சியமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கைச்சாத்திட்டனர்.

இது பற்றி அன்றைய தினம் கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நாம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். இருப்பினும் தமது சங்கு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என அவர்கள் நிபந்தனைகளை விதித்திருந்தனர்.

அந்த நிபந்தனைகளுக்கு உடன்பட முடியாது என்பதால் நாம் தனித்துச் செயற்பட்டோம். இந்நிலையில், உள்ளூராட்சி சபைகளில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் இணைந்து பயணிப்பதை விடவும், தமிழரசுக் கட்சியுடன் இணைவது எமக்கு அதிக சந்தோஷத்தை அளிக்கின்றது.” – என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்துரைத்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலப் பகுதியில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

இது தொடர்பில் சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜூன் 14 ஆம் திகதி அப்போதைய வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிடம் கையளிக்கப்பட்டது.

You Might Also Like

தமிழினப் படுகொலை தூபி சேதம் ! – கனேடிய அரசு அதிரடிக் கைது
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது..! விடுக்கப்பட்ட வேண்டுகோள்
அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வு வழங்கப்படும் – பிரதமர்
கனடாவில் மக்கள் சந்திப்பில் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஏனைய கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, அந்த நெருக்கடியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரனைப் பாதுகாத்தன.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அந்த வரலாறை விக்னேஸ்வரன் மறந்துவிட்டார். எதிர்வரும் காலத்தில் தமிழரசுக் கட்சியால் விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னெடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகளில் இருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை.” – என்றார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article சட்ட விரோத விகாரைக் காணிக்கு நட்ட ஈடு வழங்கி பௌத்த மயமாக்கத்திற்கு சட்ட அங்கீகாரம்
Next Article இஸ்ரேல் ஈரானை தாக்கியது – முக்கிய இராணுவ தலைவர்கள் படுகொலை
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.