திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

சாவகச்சேரி நகரசபை: சைக்கிள் கூட்டுக்குள் களேபரம்; ஜேவிபி அலுவலகத்துக்கே சென்று ஆதரவு கோரிய தமிழரசு!

Last updated: ஜூன் 12, 2025 06:00
Share
SHARE

சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியமைப்பதில் தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆட்சியமைப்பதில் புதிய இழுபறியேற்பட்டுள்ளது.

தமிழ் தேசிய பேரவை சார்பில் முதல்வர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டவருக்கு ஏனைய உறுப்பினர்கள் ஆதரவளிக்க மறுப்பதையடுத்து இந்த இழுபறியேற்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சியினர் சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியமைக்க, தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்துக்கே சென்று ஆதரவு கோரியுள்ளனர்.

சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் தெரிவு நாளை (13) நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஆட்சியை கைப்பற்ற இலங்கை தமிழ் அரசு கட்சி- ஈ.பி.டி.பி- தமிழ் மக்கள் கூட்டணி கூட்டும், தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரும் மல்லுக்கட்டுகின்றனர்.

தமிழ் தேசிய பேரவையில் சாவகச்சேரியின் முன்னாள் அதிபர் க.அருந்தவபாலனும் அங்கம் வகிக்கிறார். அவர் சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபைகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். சாவகச்சேரி நகரசபையில் அவர் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தினார். ஒருவரே வென்றார். சாவகச்சேரி பிரதேசசபையில் அவரால் நிறுத்தப்பட்ட யாரும் வெற்றிபெறவில்லை.

இந்த பின்னணியில், சாவகச்சேரி நகரசபையில் தன்னால் நிறுத்தப்பட்டு, வெற்றிபெற்ற- முன்னாள் வர்த்தகர் சங்க தலைவர் பிரகாஸை தவிசாளராக்க அருந்தவபாலன் விரும்புகிறார். ஆனால், சாவகச்சேரியில் தமிழ் தேசிய பேரவை சார்பில் வெற்றியீட்டிய ஏனைய அனைத்து உறுப்பினர்களும் அவரை எதிர்க்கிறார்கள்.

You Might Also Like

மனிதப் புதைகுழி தொடர்பில் சிறிலங்காவிற்கு அழுத்தம் – பிரித்தானிய MP வலியுறுத்து!
வடக்கு,கிழக்கில் முப்படை வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்- செல்வம் எம்.பி
யோஷித ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகிறார்!
மீளப் பெறப்படாத வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி – அரசு புதுக்கதை !

இந்த இழுபறியையடுத்து, கட்சித்தலைவர் கஜேந்திரகுமார் தலையிட்டு, பங்காளியான அருந்தவபாலனின் விருப்பப்படி தவிசாளரை நியமிக்க அறிவுறுத்தினார். தற்போது அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுவிட்டார்.

தற்போது மீண்டும் உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள். இதையடுத்து, கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் தலைமையில் நேற்று கலந்துரையாடல் நடந்தது. அருந்தவபாலனும் இதில் கலந்து கொண்டு, தன்னால் பரிந்துரைக்கப்படும் தவிசாளருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டார். எனினும், ஏனைய அனைத்து உறுப்பினர்களும் அதை நிராகரித்து, அருந்தவபாலனின் ஆளை தாம் பரிந்துரைக்கவும் மாட்டோம் என கூறிவிட்டனர்.

கட்சி தலைவர் கஜேந்திரகுமாரின் அறிவுத்தல் இதுதான் என செ.கஜேந்திரன் குறிப்பிட்ட போதும், யாரும் ஏற்கவில்லை.

இதேவேளை, தன்னை தவிசாளராக பரிந்துரைக்காவிட்டால், நகரசபை உறுப்புரிமை பறிபோனாலும் பரவாயில்லை, தமிழரசு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக- அருந்தவபாலனின் ஆதரவாளர் மிரட்டல் விடுவதாக ஏனைய உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்குள், சாவகச்சேரி நகரசபையில் விகிதாசார அடிப்படையில் நியமிக்கப்பட்ட தமிழ் தேசிய பேரவையின் பெண் உறுப்பினர், அந்த பகுதியில் வசிக்கவில்லையென தமிழரசு கட்சியின பின்னணியில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த பெண், நகரசபை எல்லைக்குள் வசிக்காவிட்டாலும், நகரசபை எல்லைக்குள் சொத்து வைத்துள்ளதாகவும், அதனால் வழக்கை முறியடிக்கலாம் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவட்டாரங்கள் தெரிவித்தன.

ஆயினும், வழக்கின் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்னர்- உடனடியாக இடைக்கால தடை விதிக்கப்பட்டு- அந்த பெண் வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனாலே, அது தமிழரசு கட்சிக்கு வெற்றிதான்.

இதேவேளை, சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியமைக்க தமக்கு ஆதரவளிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி பிராந்திய அலுவலகத்துக்கே சென்று, இலங்கை தமிழ் அரசு கட்சி நேற்று ஆதரவு கோரியதாக அறிய முடிந்தது.

சாவகச்சேரி நகரசபை முன்னாள் தவிசாளர், தற்போது தவிசாளராக பரிந்துரைக்கப்பட்டவர் உள்ளிட்ட 3 பேர், நேற்று தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு சென்று ஆதரவு கோரினர்.

இதன்போது, தமக்கு உப தவிசாளர் பதவி தருவதாக இருந்தால், ஆதரிக்க முடியுமென தேசிய மக்கள் சக்தி நிபந்தனை விதித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசு கட்சியினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தை கட்சியுடன் கலந்துபேசி தெரிவிப்பதாக குறிப்பிட்டு, தமிழரசு கட்சியினர் திரும்பியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியினர் தமக்கே ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் சாவகச்சேரி நகரசபையை தாம் கைப்பற்றுவது கிட்டத்தட்ட உறுதியானது என்றும் தமிழரசு கட்சியின் சாவகச்சேரி பிரமுகர்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதிக்கவுள்ள நுகர்வோர் சங்கம்
Next Article யாழில் நகர சபை எல்லைக்குள் வதியாத உறுப்பினர்கள் மீது வழக்குத் தாக்கல் !
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.