செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் கடந்த 09 நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த மனிதப்புதைகுழி தொடர்பான பரீட்சாத்த அகழ்வுப்பணி (pit test) இன்றுடன் (07.06.2025) நிறைவுக்கு வருகின்றது. இதுவரையிலான பரீட்சாத்த அகழ்வுப்பணியில் மொத்தமாக 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு மீட்க்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து இந்த மனிதப்புதைகுழியை அகழ்வு செய்வதற்கு 45 நாட்கள் நீடிப்பை சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் நேற்று கூறியிருந்த நிலையில் அதற்க்கான செலவீட்டு பாதீட்டினை உடனடியான மன்றில் சமர்ப்பிக்குமாறு கட்டளை ஆக்கியிருந்த நிலையில் இன்றையதினம் அடுத்தகட்ட ஆய்வுக்கான பாதீடு மன்றில் சமர்ப்பிக்கப்படுள்ளது.
புதைகுழி அகழ்வு இடம்பெற்றுவரும் இடத்தை தவிரவும் அதனை அண்டிய சூழலில் சந்தேகத்துக்கிடமான இடமாக கருதப்பட்டு தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவ அவர்களினால் நீதிமன்றில் செய்மதிப் படம் மூலம் நீதிமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக ட்ரோன் கமெரா மூலமாக இன்றையதினம் படமாக்கப்பட்டு ஆய்வுக்காக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களிடம் கையளிக்கப்படுள்ளது.
அடுத்தகட்ட அகழ்வு நடவடிக்கை ஜீன் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என உத்தேசிக்கப்படுள்ளது.


