திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் -ஜனாதிபதி உறுதி!

Last updated: பிப்ரவரி 28, 2025 15:31
Share
SHARE

தங்களது கொள்கை பிரகடனத்துக்கு அமையப் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.

இதில் பங்கேற்று கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் அன்றாட பணிகளை முன்கொண்டு செல்வதில் எந்த அச்சுறுத்தலும் இல்லை.

இதுவரையில் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற போர்வையில் இனவாதமும் அடிப்படைவாதமுமே காணப்பட்டது.

எனவே நாட்டில் மீண்டும் இனவாதத்தையும் அடிப்படை வாதத்தையும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

You Might Also Like

அரசியலில் காணப்படும் சில கழிவுகளை வெளிப்படுத்த வேண்டும் – நளிந்த ஜயதிஸ்ஸ
நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பிரதமர் ,எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் நாடாளுமன்றில் கருத்து!
எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது – ஜனாதிபதி!
நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி!

தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் கருத்துரைக்கப்படுகிறது.

அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகவும் உள்ளது.

எனினும் நாட்டில் தற்போது இடம்பெறுகின்ற திட்டமிட்ட குற்றக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான தனியானதொரு சட்டம் இல்லை.

இருப்பினும் கட்டுப்படுத்துவதற்காக அவர்களைக் புதியதொரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

எனவே, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று அது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே நாங்கள் கூறியுள்ளோம்.

இதன்படி, திட்டமிட்ட குழுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக புதியதொரு சட்டத்தை உருவாக்கி அதனூடாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இது பல தசாப்தங்களாக மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போன்று திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தரப்பினரை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் -சீனா!
Next Article பதவி விலகப் போகிறாரா அர்ச்சுனா?
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.