வடபகுதி கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செய்ற்பாடுகளைத் தடுத்து மீன்வர்களைப் பாதுகாக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் நேற்று சபை ஒத்திவைப்பு வேளையில் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.
சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் உண்மையான மீன்வர்கள் மீனவக் குடும்பங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.
எனவே, அரசாங்கம் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில்களை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
இந்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வழிமொழிந்து உரையாற்றினார்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர்.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோருக்கு இடையே வாதப்பிரதிவாதமொன்று இடம்பெற்றது.
